கொவிட்-19, குரங்கம்மை, உக்ரேன் போர்: உலகம் எதிர்நோக்கும் பெரிய சவால்கள்

கொவிட்-19, குரங்கம்மை, உக்ரேன் போர்: உலகம் எதிர்நோக்கும் பெரிய சவால்கள்

2 mins read

கொவிட்-19, உக்­ரே­னில் நடைபெறும் போர், குரங்­கம்மை உள்ளிட்ட பெரிய சவால்­களை உல­கம் எதிர்­கொண்டு வரு­வ­தாக உலக சுகாதார நிறு­வ­னத்­தின் தலை­மை இயக்குநர் டெட்ரோஸ் அதா­னோம் கேப்­ரி­யேசுஸ் எச்­ச­ரித்­துள்­ளார்.

சுவிட்­சர்­லாந்­தின் ஜெனிவா நகரில் உலக சுகா­தா­ரக் கூட்­டத்தை நேற்று முன்­தி­னம் தொடங்­கி­வைத்­துப் பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 பெருந்­தொற்று, நம் உல­கம் எதிர்­கொள்­ளும் ஒரே­யொரு நெருக்­க­டி­யல்ல.

"நாங்­கள் பேசிக்­கொண்­டு இருக்கும் இவ்­வே­ளை­யில், ஜன­நா­யக காங்கோ குடி­ய­ர­சில் எங்­களு­டைய சகாக்­கள் இபோலாவை எதிர்­கொள்­கின்­ற­னர். குரங்­கம்மை தொற்று பர­வு­வ­தோடு, கல்­லீ­ரல் அழற்­சி­யும் அதி­க­ரித்து வரு­கிறது. ஆப்­கா­னிஸ்­தான், எத்­தி­யோப்­பியா, சோமா­லியா, தெற்கு சூடான், சிரியா, உக்­ரேன், ஏமன் ஆகிய நாடு­களில் சிக்­க­லான மனி­த­நேய நெருக்­கடிநிலை இருக்கிறது.

"நோய்ப் பர­வல், வறட்சி, பஞ்­சம், போர், பரு­வ­நிலை மாற்­றம், நியா­ய­மற்ற நிலை ஆகிய சவால்­மிக்க சூழல்­களை நாம் எதிர்­நோக்கு­கி­றோம்," என்று டாக்­டர் டெட்ரோஸ் விவ­ரித்­தார்.

இதற்­கி­டையே, ஆப்­பி­ரிக்­கா­வுக்கு வெளியே 15 நாடு­களில் குரங்­கம்மை பர­வி­யி­ருப்­பது குறித்து உலக சுகா­தார நிறு­வன நிபு­ணர்­கள் கலந்­தா­லோ­சித்­த­னர்.

ஐரோப்பா, அமெ­ரிக்கா, கனடா, ஆஸ்­தி­ரே­லியா, இஸ்­ரேல் ஆகிய பகு­தி­களில் 80க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது. என்­றா­லும், அது மேலும் பர­வக்­கூ­டிய சாத்­தி­யம் குறைவு எனக் கூறப்­ப­டு­கிறது.

மத்­திய, மேற்கு ஆப்­பி­ரிக்­கா­வில் நெடுந்­தொ­லை­வில் உள்ள பகு­தி­களில் வசித்து வந்­தோ­ரி­டம் இதற்கு முன்­னர் குரங்­கம்மை கண்­ட­றி­யப்­பட்டு வந்­துள்ளது. மனி­தர்­களுக்கு இடையே அவ்­வ­ளவு எளி­தில் பர­வும் தன்மை கொண்­டி­ராத குரங்­கம்­மைக்­கான அறி­கு­றி­கள் பொது­வாக லேசா­ன­தாக இருக்கும்.

குரங்­கம்மை தொற்­றி­யோ­ரில் பெரும்­பா­லா­னோர் ஒரு சில வாரங்­களில் குண­ம­டைந்து விடு­வ­தாக பிரிட்­ட­னின் தேசிய சுகா­தா­ரச் சேவை குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் பலரை குரங்­கம்மை தொற்­றி­யி­ருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தாக முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்த உலக சுகா­தார நிறு­வ­னம், கூடு­த­லா­னோ­ருக்கு அத்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­லாம் எனக் கூறி­யி­ருந்­தது.

பிரிட்­ட­னில் முதன்­மு­றை­யாக குரங்­கம்மை தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து, ஸ்பெ­யின், போர்ச்­சு­கல், ஜெர்­மனி, பெல்­ஜி­யம், பிரான்ஸ், நெதர்­லாந்து, இத்­தாலி, சுவீ­டன், ஆஸ்­தி­ரியா, சுவிட்­சர்­லாந்து உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­களில் அது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளது.

பிரிட்­ட­னில் சமூக அள­வில் குரங்­கம்மை பர­வி­வ­ரு­வ­தாக அந்நாட்டு சுகா­தா­ரப் பாது­காப்பு அமைப்­பின் தலைமை மருத்­துவ ஆலோ­ச­கர் டாக்­டர் சூசன் ஹாப்­கின்ஸ் கூறி­னார். தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள், மேற்கு ஆப்­பி­ரிக்­கா­வுக்­குச் சென்று வந்­த­வர்­க­ளு­டன் தொடர்­பில் வர­வில்லை என்­ப­தை­யும் அவர் தெரி­வித்­தார்.