பணவீக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்

பணவீக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்

2 mins read
41fe38d7-8bea-4e41-82bc-824a8399d999
நிக்கேய் ஊடகக் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் டெட்சுயா இகுச்சி உடனான நேர்காணலில் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்றார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

ஜப்பானிய ஊடகக் குழுமம் நிக்கேய்க்கு அளித்த பேட்டியில் பிரதமர் லீ கருத்து

உல­கப் பொரு­ளி­யல் தற்­போது அதிக பண­வீக்­கத்தை எதிர்­கொண்டு வரு­கிறது. இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­கள் பொரு­ளி­யல் மந்­த­நி­லைக்கு வித்தி­டக்­கூ­டும்.

என்­றா­லும், உல­கிற்குப் பண­வீக்­கம் கடு­மை­யான பிரச்­சி­னை­யா­கி­வி­டும் என்­ப­தால் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்பட வேண்டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார்.

ஜப்­பானியத் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் இந்த வாரம் ஆசி­யா­வின் எதிர்­கா­லம் குறித்த அனைத்­து­லக மாநாட்­டில் பிரதமர் லீ கலந்துகொள்ள இருக்கும் வேளையில், ஜப்பானிய ஊட­கக் குழு­ம­மான நிக்கேயிடம் கடந்த வெள்­ளிக்­கிழமை அவர் பேசி­ய­போது இவ்வாறு கூறி­னார்.

நிக்­கேயில் நேற்று வெளி­யிடப்­பட்ட இந்த நேர்­கா­ண­லில் பேசிய அதன் முதன்மை ஆசி­ரி­ய­ரான டெட்­சுயா இகுச்சி, மத்திய வங்­கி­கள் அவற்­றின் நாண­யக் கொள்­கை­யைக் கடு­மை­யாக்­கும் நிலைக்­குத் தள்ளப்­பட்­டி­ருப்­ப­தைச் சுட்­டி­னார். இது, பொரு­ளி­யல் வளர்ச்­சி­யை­யும் உல­க­ளா­விய நிதிச் சந்­தை­யை­யும் எதிர்­ம­றை­யாக பாதிக்­கக்­கூ­டும் என்றார் அவர்.

அதற்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர் லீ, எவ­ரும் எதிர்­பார்க்­காத விதத்­தில் கொவிட்-19 பெருந்­தொற்­றி­லி­ருந்து உல­கப் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டைந்­த­தா­கச் சொன்­னார். பொரு­ளி­யல் ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டது இதற்கு ஒரு கார­ணம்.

"என்­றா­லும், அமெ­ரிக்­கா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் பொரு­ளி­யல் மீட்சி­ய­டைந்து வந்­த­போ­தும், அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­கள் தாரா­ள­மாக செயல்­ப­டுத்­தப்­பட்­டன," என்று கூறிய பிர­த­மர் லீ, உக்­ரே­னில் நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தற்கு முன்பே பண­வீக்­கம் உயர்­வ­தற்கு இது கார­ண­மாக விளங்­கி­ய­தா­கச் சொன்­னார்.

"இப்­போது இந்­தப் போர், நில­வ­ரத்தை இன்­னும் மோச­மாக்­கி­யுள்­ளது. ஏனெ­னில், எரி­சக்தி விநி­யோ­கத்­திற்கு அது இடை­யூறு விளை­வித்­துள்­ளது. உல­கச் சந்தையில் ரஷ்ய எரி­சக்­திக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, உணவு விநி­யோ­கம், தானி­யங்­க­ளுக்கு அது இடை­யூறு ஏற்­படுத்­தி­யுள்­ளது," என்­றார் பிர­த­மர் லீ.

ஓராண்­டிற்கு முன்பு, பண­வீக்­கத்­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­பதற்கு மத்­திய வங்­கி­கள் அவ்வ­ள­வாக கவ­லைப்­ப­ட­வில்லை என்­பதை அவர் சுட்­டி­னார். சொல்­லப் போனால், பணச் சுருக்­கம் குறித்தே அவை கவலைப்­பட்­டன.

"அப்­போது அவை மெத்­த­ன­மாக இருந்­த­தாக நான் நினைக்­கி­றேன். ஆனால், அவற்­றின் நிலைப்­பாட்டை மாற்ற வேண்­டும் என்­பது இப்­போது தெளி­வா­கத் தெரி­கிறது. அவை அவ்­வாறு செய்­யத் தொடங்­கி­விட்­டன என நான் நம்­பு­கி­றேன்," என்று பிரதமர் லீ விவ­ரித்­தார்.

ஆனால், தற்­போது பண­வீக்கம் அதி­க­மாக இருப்­ப­தால், அதைக் குறைக்க கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் தேவை என்­றார் அவர்.

பொரு­ளி­யல் சக்­தி­கள் தற்­போது ஒத்­து­ழைக்­கா­ததை பிரதமர் லீ ஏற்­றுக்­கொண்­டார். உலகப் பொரு­ளி­ய­லுக்கு மட்­டு­மல்­லா­மல், பரு­வ­நிலை மாற்­றம், அணு­வாயுத மிரட்­டல் போன்ற இதர விவ­கா­ரங்­க­ளுக்­கும் அது பிரச்­சி­னையை ஏற்­படுத்து­கிறது.

"அனைத்­து­லக ஒத்­து­ழைப்பு இல்­லா­மல், மானிடம் எதிர்­நோக்கும் இந்­தப் பொது­வான பிரச்­சி­னை­களை உங்­க­ளால் சமா­ளிக்க இய­லாது," என்­றார் அவர்.

மேலும் செய்திகள் பக்கம் 2ல்