கடற்துறையில் ஒழுங்கை நிலைநாட்ட நான்கு நாடுகள் முயற்சி

கடற்துறையில் ஒழுங்கை நிலைநாட்ட நான்கு நாடுகள் முயற்சி

2 mins read

சீனக் கப்­பல்­க­ளின் நடை­முறை குறித்து கவலை அதி­க­ரித்து வரும் நிலை­யில் சட்­ட­வி­ரோத மீன்­பி­டித்­த­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் புதிய திட்­டத்­தில் ஜப்­பான், இந்­தியா, ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் அமெ­ரிக்­கா­வும் இணைந்­துள்­ளது.

நேற்று அறி­விக்­கப்­பட்ட இந்த ஐந்­தாண்டு கால முயற்­சி­யா­னது, இந்­திய-பசி­பிக் வட்­டா­ரத்­தில் சட்­ட­வி­ரோத கப்­பல் நட­வ­டிக்­கை­கள், மீன்­பி­டித்­தல் கண்­கா­ணிப்பை மேம்­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது.

இந்தோ பசி­பிக் கடற்­துறை விழிப்­பு­ணர்­வுத் திட்­டத்­தின் அறி­மு­கம் பற்­றிய அறி­விப்பு, இந்­நான்கு நாடு­கள் நடத்­தும் இரண்­டா­வது சந்­திப்­பின் இறு­தி­யில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சந்­திப்­பில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, ஜப்­பா­னி­யப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னீஸ் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

இந்தோ பசி­பிக் வட்­டார நாடு­களை­யும் இந்­தி­யப் பெருங்­க­டல், தென்­கி­ழக்­கா­சியா, பசிபிக் தீவு­கள் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள தக­வல் இணைவு நிலையங்­ க­ளை­யும் ஆத­ரிக்­க­வும் ஆலோ­ச­னை­யு­டன் இணைந்து செயல்­ப­ட­வும் அந்­நான்கு தலை­வர்­கள் கூட்­ட­றிக்­கை­யின்­மூ­லம் தெரி­வித்­த­னர்.

வளப்­பத்­தை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் ஊக்­கு­விக்க இந்­நா­டு­கள், கடல்­துறை சார்ந்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­ப­தற்­கான தொழில்­நுட்­பத்­தை­யும் பயிற்­சி­யை­யும் வழங்­க­வுள்­ளன.

சுதந்­தி­ர­மான, தாராளமயமான இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­திற்­காக ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­வும், கால­நிலை மாற்­றத்தை எதிர்த்­துப் போரா­ட­வும் 'குவாட்' நாடு­க­ளின் நான்கு தலை­வர்­களும் நேற்று உறு­தி­பூண்­ட­னர்.

இந்­திய, பசி­பிக் பெருங்­க­ட­லில் சீனா­வின் ஆதிக்­கத்தை கட்­டுப்­படுத்த இந்­தியா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா ஆகிய நான்கு நாடு­கள் இணைந்து 2007ஆம் ஆண்­டில் 'குவாட்' என்ற அமைப்பை உரு­வாக்­கின.

ஜப்­பான் தலை­ந­க­ரில் நடை­பெறும் இந்த அமைப்­பின் உச்ச மாநாட்­டில் நேற்று இந்­நா­டு­களின் தலை­வர்­கள் பங்­கேற்­றுப் பேசி­னர்.

மாநாட்­டின் முக்­கிய அம்­ச­மாக, அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, புருணை, இந்­தோ­னீ­சியா, தென்­கொ­ரியா, மலே­சியா, நியூ­சி­லாந்து, பிலிப்­பீன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து, வியட்னாம் ஆகிய 13 நாடு­கள் இணைந்து இந்தோ-பசி­பிக் பொரு­ளி­யல் வளர்ச்சி கூட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளன. சீனா­வின் வளர்ச்சி, ஆதிக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் புதிய அமைப்பு தொடங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் செய்­தி­கள் பக்கம் 10