தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) ஐந்து திட்டங்களின்கீழ் நாளை (மே 27) புதிய பிடிஓ வீடு கள் விற்பனைக்கு விடப்படும் என்றும் அவற்றில் இரண்டு முதன்மை வட்டார வீடமைப்புத் திட்டங்கள் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
இத்திட்டங்களின் வீடுகளுக்கான விண்ணப்பம் ஜூன் 2ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் நேற்று கூறினார்.
புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ ஆகிய முதிர்ச்சிஅடைந்த பேட்டைகளிலும் ஜூரோங் வெஸ்ட், ஈசூன் ஆகிய முதிர்ச்சிபெறாத பேட்டைகளிலும் ஏறக்குறைய 4,500 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
இவற்றில் புக்கிட் மேராவும் குவீன்ஸ்டவுனும் முதன்மை வட்டார வீடமைப்பு மாதிரித் திட்டத்தின்கீழ் வருவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்திருந்தது.
புக்கிட் மேரா வட்டாரத்தில் ஹெண்டர்சன், தியோங் பாரு மற்றும் லோவர் டெல்டா சாலை
களின் எல்லைக்குட்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 1,660 மூவறை மற்றும் நான்கறை வீடுகள் கட்டப்படும்.
குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் போன விஸ்தா எம்ஆர்டி நிலையத்தை அடுத்துள்ள கிம் மோ ரோட்டில் உள்ள தளத்தில் 860 மூவறை மற்றும் நான்கறை வீடுகள் இடம்பெறும்.
இந்த வீடுகளுக்கான விற் பனையின்போதே, எஞ்சிய வீடு
களின் விற்பனைத் திட்டமும் நடைபெறும். தீவு முழுவதும் பல்வேறு நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளை உள்ளடக்கிய திட்டம் இது.
பொங்கோலில் உள்ள நார்த்ஷோர் எட்ஜ் பிடிஓ திட்டப் பணிகளைப் பார்வையிட நேற்று வந்த திரு லீ, புதிய பிடிஓ திட்டங்கள் தொடங்கப்படுவதைப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார். நார்த்ஷோர் எட்ஜ் பிடிஓ திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 23,000 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விடுவதற்கான பணிகளில் வீவக ஈடுபட்டு வருகிறது.நாளை தொடங்கவிருக்கும் ஐந்து பிடிஓ விற்பனை நடவடிக்கை களை அடுத்து ஆகஸ்ட் மாதம் அங் மோ கியோ, புக்கிட் மேரா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், குவீன்ஸ்டவுன் மற்றும் உட்லண்ட்ஸில் புதிய திட்டங்கள் தொடங்கப்படும். தேவையின் அடிப்படையில், 2021ஆம் ஆண்டு தொடங்கி 2025 ஆம் ஆண்டுக்குள் 100,000 வரையிலான வீடுகள் விற் பனைக்கு விடப்படும் என்றும் திரு லீ தெரிவித்தார்.
5 திட்டங்களில் இடம்பெறும் வீடுகளுக்கு ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்

