பிடிஓ வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் குறைகிறது

பிடிஓ வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் குறைகிறது

2 mins read

இதற்­கி­டையே, ஆறு மாதங்­க­ளுக்­கும் அல்­லது அதற்கு மேலும் தாம­த­ம­டைந்த பிடிஓ திட்­டங்

களின் எண்­ணிக்கை 58க்குக் குறைந்­துள்­ள­தாக திரு லீ தெரி­வித்­துள்­ளார். கடந்த ஆண்டு இந்த எண்­ணிக்கை 74ஆக இருந்­தது.

இவ்­வாண்­டின் ஏப்­ரல் மாத நில­வ­ரப்­படி 60 விழுக்­காட்­டுக்­கும் குறைந்த வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக பிடிஓ திட்­டங்­கள் தாம­தத்தை எதிர்­நோக்­கின.

ஓராண்­டுக்கு முன்­னர் இது 80 விழுக்­கா­டாக இருந்­தது. கடந்த ஆண்டு, கட்டி முடிக்­கப்­பட்ட அதி­க­மான பிடிஓ வீடு­கள் அவற்­றின் உரி­மை­யா­ளர் களி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. ஏறக்­கு­றைய 15,000 வீடு­க­ளின் சாவி அவற்­றின் உரி­மை­யா­ளர்களி­டம் தரப்­பட்­ட­தாக திரு லீ கூறி­னார்.

2019ஆம் ஆண்டு 13,500 வீடு­கள் மட்­டுமே கட்டி முடிக்­கப்­பட்டு அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இந்த ஆண்டு மேலும் அதி­க­மான வீடு­க­ளைக் கட்டி முடிப்­போம் என்ற நம்­பிக்கை உள்­ளது என்­றார் அவர்.

அடுத்த ஈராண்­டு­க­ளுக்­கான பிடிஓ திட்­டங்­க­ளின் இடை­நிலை காத்­தி­ருப்­புக் காலம் நான்­காண்டு முதல் நான்­கரை ஆண்டு வரை இருக்­கக்­கூ­டும் என்­றும் கொவிட்-19 பர­வல் மிகுந்­தி­ருந்­த­போது காத்­தி­ருப்­புக் காலம் நான்கு முதல் ஐந்து ஆண்­டு­கள் வரை இருந்­தது என்­றும் ஒப்­பிட்­டுக் கூறி­னார் அமைச்­சர்.

வீடு கட்­டப்­படும் பகுதி, நிலப்

பரப்பு மற்­றும் சுற்­று­சூ­ழல் ஆகிய கார­ணி­க­ளால் காத்­தி­ருப்பு காலம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கிறது என்­றார் அவர். உய­ர­மான கட்­ட­டங்­க­ளைக் கொண்ட சில பிடிஓ திட்­டங்­கள் நிறை­வேற நீண்­ட­கா­லம் பிடிக்­கும். சில நேரங்­களில் உயர்­மாடி தோட்­டங்­களை அவற்­றில் அமைக்க வேண்டி இருக்­கும்.

அதற்­கேற்ற வகை­யில் கட்­ட­டத் தரத்­தை­யும் வடி­வ­மைப்­பை­யும் மேற்­கொள்­வ­தில் அதிக சிர­மம் ஏற்­ப­டு­வ­தும் அதிக கால தாம­தம் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணம் என்­றார் திரு லீ.