பெண்ணுக்கு அடித்தது யோகம்; வைரக்கல் கண்டெடுத்தார்

பெண்ணுக்கு அடித்தது யோகம்; வைரக்கல் கண்டெடுத்தார்

2 mins read

சுரங்­கம் ஒன்­றைத் தோண்­டிய கிரா­மத்­துப் பெண் ஒரு­வ­ருக்கு பத்து லட்­ச ரூபாய் மதிப்­பு­டைய வைரக்­கல் கிடைத்­துள்­ளது.

மத்­திய பிர­தேச மாநி­லம் பன்னா மாவட்­டம் வைரச் சுரங்­கங்­க­ளுக்­குப் பிர­ப­ல­மான இடம். இங்கு கிட்­டத்­தட்ட 12 லட்­சம் கேரட் வைரக்­கற்­கள் புதைந்­துள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இங்­குள்ள சுரங்­கங்­களில் அவ்­வப்­போது சிறு­சிறு வைரக்­கற்­கள் சில­ருக்­குக் கிடைப்­ப­துண்டு.

அந்த வகை­யில், கிருஷ்ண கல்­யாண்­பூர் என்­னும் கிரா­மத்­தைச் சேர்ந்த சமேலி பாய், ஆழம் குறைந்த வைரச்­சு­ரங்­கம் ஒன்­றில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­தார். அப்­போது சற்­றும் எதிர்­பா­ராத வகை­யில் வைரக்­கல் ஒன்று அவ­ரது கண்­ணில் தென்­பட்­டது. உட­ன­டி­யாக அதனை எடுத்து தமது கண­வ­ரி­டம் காண்­பித்­தார் அவர்.

இரு­வ­ரும் நேற்று முன்­தி­னம், வைரக்­கல் ஆய்வு அலு­வ­ல­கத்­தில் அந்த வைரத்தை ஒப்­ப­டைத்­த­னர். இந்த விவ­ரத்தை அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அந்த 2.08 கேரட் வைரத்­தின் மதிப்பு கிட்­டத்­தட்ட பத்து லட்­சம் ரூபாய் என்று பன்னா மாவட்ட வைரக்­கல் ஆய்வு அலு­வ­லக அதி­காரி அனு­பம் சிங் தெரி­வித்­தார்.

அடுத்து நடக்க இருக்கும் ஏலத்­தில் வைரக்­கல் வைக்­கப்­படும் என்­றும் ஏலத்­தொகை அர­சாங்க வழி­காட்­டு­தல்­க­ளுக்கு இணங்க நிர்­ண­யிக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

ஏலத்­தில் கிடைக்­கும் தொகை­யி­லி­ருந்து உரி­மைத்­தொகை (ராயல்டி) மற்­றும் வரி­கள் போக எஞ்­சிய பணம் சமேலி பாயி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வைரக்­கல் மூலம் கிடைக்­கும் பணத்­த்தைக் கொண்டு வீடு ஒன்­றைக் கட்ட ஆசைப்­ப­டு­வ­தாக இந்­தப் பெண்­ணின் கண­வர் அரவிந்த் சிங் கூறி­னார்.

இதற்கு முன்­னர், இவ்­வாண்­டின் பிப்­ர­வரி மாதம் 1.20 கோடி ரூபாய் மதிப்­புள்ள 26.11 வைரக்­கல்லை ஆட­வர் ஒரு­வர் கண்­டெ­டுத்­தார். இதே­போல கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 40 லட்­ச ரூபாய் மதிப்­புள்ள 8.22 கேரட் வைரக்­கல் நான்கு தொழி­லா­ளி­

க­ளுக்­கு புதைய­லா­கக் கிடைத்­தது. இதனால், சிறு சிறு வைரச் சுரங்கங்களை சிலர் குத்தகைக்கு எடுத்து தங்களது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கின்றனர்.