'40 விழுக்காட்டைத் தொடும் பணவீக்கம்'

'40 விழுக்காட்டைத் தொடும் பணவீக்கம்'

1 mins read

ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் நேர்­கா­ண­லில் பங்­கேற்ற ரணில் விக்ரமசிங்கே, இலங்­கை­யின் பண­வீக்­கம் வெகு­வி­ரை­யில் 40 விழுக்­காட்­டைத் தொட்­டு

­வி­டும் நிலை இருப்­ப­தா­கத்

தெரி­வித்­தார்.

இலங்­கை­யின் தற்­போ­தைய பண­வீக்­கம் 33.8 விழுக்­கா­டாக உள்­ளது. கடந்த ஆண்­டின் 5.5 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் இது கிட்­டத்­தட்ட ஆறு மடங்கு அதி­கம். நாட்­டின் அந்­நி­யச் செலா­வணி கையி­ருப்­புக் கடு­மை­யாக வீழ்ச்சி அடைந்­த­தன் கார­ண­மாக இறக்குமதிக்­குப் பணம் செலுத்த முடி­யா­மல் இலங்கை திண்­டா­டி­ வருகிறது. அண்டை நாடான இந்­தியா அதற்கு தன்­னால் இயன்ற உத­வி­க­ளைச் செய்து வரு­கிறது.

அண்­மை­யில், $33 பில்­லி­யன் கடன் அனு­ம­திக்கு இந்­தியா ஒப்­பு­தல் அளித்­தது. மேலும், 40,000 மெட்­ரிக் டன் பெட்­ரோல், அதே அளவு டீசல், 400,000 மெட்­ரிக் டன் எரி­வாயு போன்­ற­வற்­று­டன் அரிசி, பால் மாவு, மருந்­துப் பொருள்­க­ளை­யும் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் இலங்­கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது. இதற்கு நன்றி தெரி வித்த திரு விக்ரமசிங்கே, சீனா விடமிருந்து உரங்களையும் மருந்துப்பொருள்களையும் கோர இருப்பதாகக் கூறினார்.