குரங்கம்மை தொற்று சிங்கப்பூரில் சாத்தியம்; ஆனாலும் கொவிட்-19 அளவுக்கு இராது

குரங்கம்மை தொற்று சிங்கப்பூரில் சாத்தியம்; ஆனாலும் கொவிட்-19 அளவுக்கு இராது

2 mins read

குரங்­கம்மை, கொவிட்-19 போன்று பெருந்­தொற்­றாக உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு மிக­வும் குறை­வு­தான் என்­றா­லும் சிங்­கப்­பூ­ரில் குரங்­கம்மை எவருக்­கா­வது தொற்­றி­னால் அது பற்றி வியப்­படைய தேவையில்லை என்று சுகாதார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் பல இடங்­களுக்கும் பர­வ­லாக பய­ணம் மேற்­கொள்­கி­றார்­கள். சிங்­கப்­பூர் வர்த்தக, அனைத்­து­லக மைய­மாக இருக்­கிறது. ஆகை­யால் சிங்­கப்­பூ­ரில் வரும் வாரங்­களில் யாருக்­கா­வது குரங்­கம்மை கிருமி தொற்­றி­னால் அதில் வியப்­ப­டை­வ­தற்கு ஒன்­று­மில்லை என்று ஃபேஸ்புக்­கில் அவர் தெரி­வித்­தார்.

நல்ல வேளை­யாக சிங்­கப்­பூ­ரில் இப்­போது தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நடை­மு­றை­களும் பொதுச் சுகா­தார நடை­மு­றை­களும் நடப்­பில் இருக்­கின்­றன.

2019ல் கொவிட்-19 கிருமி சிங்­கப்­பூ­ரில் நுழைந்­ததை அடுத்து அந்த நடை­மு­றை­கள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன.

குரங்­கம்மை என்­பது ஒரு வகை தொற்­று­நோய்­தான். அது விலங்கு­களில் இருந்து மனி­தர்­க­ளுக்­குப் பர­வு­கிறது. உல­க­ள­வில் 20 நாடு­களில் 200 பேருக்கு அந்தக் கிருமி தொற்றி இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

திரு ஓங், உலக சுகா­தார பேரவைக் கூட்­டத்­தில் அண்­மை­யில் கலந்­து­கொண்­டார். குரங்­கம்மை தொற்று பற்றி அந்­தக் கூட்­டத்­திலும் விவா­திக்­கப்­பட்­டது என்­பதை அவர் சுட்­டி­னார்.

குரங்­கம்மை கிருமி ஆப்­பி­ரிக்­கா­வில் குறிப்­பிட்ட இடங்­களில் மட்­டும் காணப்­படும் ஓர் அரிய தொற்று நோயாக இருந்து வந்­தது.

ஆனால், இந்த நிலை மாறி­விட்­டது. இப்­போது உல­கின் பல பகுதி­களி­லும் மனி­தர்­க­ளி­டம் இருந்தே மனி­தர்­க­ளுக்கு அந்­தக் கிருமி பரவத் தொடங்­கி­விட்­டது.

குரங்­கம்மை கிருமி தொற்றி இருப்­போ­ருக்கு மிக அரு­கில் ஒருவர் சென்­றால் அந்­தக் கிருமி அவ­ருக்­கும் பரவிவிடும் என்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

யாருக்­கா­வது வெளியே விளக்க முடி­யா­த­படி திடீ­ரென்று உட­லில் தடிப்பு தென்­பட்­டால் அவர் உடனடி­யாக மருத்­து­வ­ரைப் பார்க்க வேண்டும். அண்­மை­யில் வெளி நாட்டுக்குப் பய­ணம் மேற்­கொள்­ள­வில்லை என்­றா­லும்­கூட உட­லில் ஏதே­னும் சந்­தே­கத்­திற்­குரிய அறி­கு­றி­கள் தெரிந்­தால் மருத்­து­வ­ரைப் பார்க்க வேண்­டும். இப்­படி செய்­தால் விரை­வில் குண­ம­டைய வாய்ப்­புண்டு என்று அமைச்­சர் ஆலோ­சனை கூறி­னார்.

குரங்­கம்மை என்­பது பொது­வான அம்மை நோயைப் போன்றது­தான். ஆனால், குரங்­கம்மை தொற்றி­னால் ஏற்­பு­டைய சிகிச்­சையைப் பெற்று மற்­ற­வர்­க­ளுக்கு அது தொற்­றா­மல் இருப்­பதை உறு­திப்­படுத்­திவிடலாம் என்று அமைச்சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, குரங்­கம்மை கிருமி வழக்­க­மாக காணப்­படும் நாடு­களில் மட்­டு­மின்றி இதர பல நாடு­களிலும் அந்­தக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு இருப்­பதை உலக சுகா­தார நிறு­வ­னம் சுட்­டி­யது.

அது, மக்­கள் கவ­லைப்­படும் அளவுக்கு வேக­மா­கப் பர­வும் ஒரு நோய் அல்ல என்­றா­லும் அந்­தக் கிரு­மித்­தொற்று மெது­வாக சமூ­கப் பர­வ­லாக மாறி­வி­டக்­கூ­டிய ஆபத்து உண்டு என்று அந்த நிறு­வ­னம் எச்­ச­ரித்து இருக்­கிறது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களைக் கண்டு­பி­டித்து அவர்­களைத் தனி­மைப்­படுத்­து­வதே குரங்­கம்மை பர­வலைத் தடுப்­ப­தற்­கான முதல் கட்ட நட­வடிக்கை என்று அந்த உலக அமைப்பு தெரி­வித்து உள்­ளது.

வரும் நாட்­களில் குரங்­கம்மை மேலும் பலரை தொற்றும் வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­தது.