எதிர்த்தரப்பு கருத்து: இலங்கை தலைதூக்க தேர்தல்தான் வழி

எதிர்த்தரப்பு கருத்து: இலங்கை தலைதூக்க தேர்தல்தான் வழி

1 mins read

இலங்­கைக்கு மக்­க­ளால் தேர்ந்­தெடுக்­கப்­படும் புதிய அர­சாங்­கம் தேவை என்றும் அப்­போ­து­தான் கொள்கைகள் நிலைப்­படும் என்றும் முக்­கிய எதிர்க்­கட்­சித் தலை­வர் தெரி­வித்து இருக்­கி­றார்.

இலங்கை வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரும் இந்­தத் தரு­ணத்­தில் நாடு தலைதூக்க புதிய தேர்­தல்­தான் வழி என்று சமாஜ் ஜன பால­வே­கயா என்ற எதிர்க்­கட்­சி­யின் தலை­வர் சஜித் பிரே­ம­தாச பேட்­டி­யில் கூறினார்.

"மக்­கள் தேர்­தல்­களை விரும்பு­வதில்லை. அவர்­கள் தீர்­வையே விரும்­பு­கி­றார்­கள். ஆனால் இப்­போதைய நெருக்­க­டிக்­குத் தீர்வு காண வேண்டு­மா­னால் புதிய தேர்­தல் ஒன்­று­தான் வழி," என்று புளூம்பர்க் நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் அவர் கூறி­னார்.

"மக்­கள் படும் சிர­மங்­கள்­தான் மிகுந்த கவலை அளிக்­கிறது. மக்­கள் உயிர்­வாழ அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்­று­வ­து­தான் இப்­போது முதல் காரி­ய­மாக இருக்­க­வேண்­டும்," என்று அவர் கூறினார்.

மிக முக்­கி­ய­மாக கொள்­கை­கள் நிலைப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

இலங்­கை­யில் படு­மோ­ச­மான பொரு­ளி­யல் நெருக்­கடி இப்­போது நில­வு­கிறது. விலை­வாசி 40% அதி­க­ரித்­து­விட்­டது. எரி­பொ­ருள், மருந்து, மின்­சா­ரம் எது­வுமே போதிய அள­வுக்கு இல்­லா­மல் மக்கள் திண்­டா­டு­கி­றார்­கள்.

கடும் கோப­ம­டைந்த அவர்­கள் போராட்­டங்­களில் இறங்கிவிட்டனர்.