4 இந்தியர் உட்பட 22 பேருடன் நேப்பாள விமானம் விழுந்தது

4 இந்தியர் உட்பட 22 பேருடன் நேப்பாள விமானம் விழுந்தது

2 mins read
1e80aba9-2449-48c5-a502-eefafc42258f
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின் கதி தெரியாமல், செய்வதறியாது பொக்காரா விமான நிலையத்தில் அழுது புலம்பினர். படம்: ஏஎஃப்பி -

நேப்­பா­ளத்­தில் தனி­யார் நிறு­வ­னம் நடத்­தும் விமா­னம் ஒன்று நேற்று 22 பேரு­டன் விழுந்து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அந்த விமா­னத்­தில் இந்­தி­யர்­கள் நால்­வர் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. நேப்­பா­ளத் தலை­ந­கர் காட்­மாண்­டு­வில் இருந்து சுமார் 200 கி.மீ. வட­மேற்கே உள்ள பொக்­காரா என்ற நக­ரிலிருந்து காலை 9.50 மணிக்­குப் புறப்­பட்ட அந்த விமானம், ஜோம்­சோம் என்ற நகரை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்­தது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தாக ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் கூறியது.

ஆனால் வழியில் விமானம் முஸ்தாங் என்ற மாவட்டத்தில் குவோங் என்ற கிரா­மத்­தில் விழுந்து­விட்­ட­தா­க­வும் மீட்­புப் படை­யி­னர் அங்கு விரை­வ­தா­க­வும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம் லாம்சே என்ற ஆற்று முகத்துவாரத்தில் விழுந்தது என்று குவோங் கிராம மக்கள் நேப்பாள ராணுவத்திடம் கூறினர்.

தேடுதல், மீட்பு நட­வடிக்கை தொடர்ந்து நடந்து வரு­வ­தாக காட்­மாண்­டு­வில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் முன்னதாக தெரி­வித்­தது.

'டாரா ஏர்' என்ற நிறு­வ­னம் அந்த விமா­னத்தை நடத்தி வந்தது.

புறப்பட்ட பிறகு 15 நிமிடங்கள் கழித்து விமா­னம் தொடர்பை இழந்து­விட்­டது என்று சுதர்­ஷன் பர்த்­து­வாலா என்ற டாரா ஏர் பேச்­சா­ளர் கூறி­யதாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

விமா­னத்­தில் 19 பய­ணி­களும் மூன்று ஊழி­யர்­களும் இருந்­த­னர். பய­ணி­களில் நான்கு இந்­தி­யர்­களும் ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த இரு­வ­ரும் 13 நேப்­பா­ளப் பய­ணி­களும் அடங்கு­வர் என்று டாரா ஏர் நிறு­வன அதி­காரி குறிப்­பிட்­டார். விமான ஊழி யர்கள் அனைவரும் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று மாலை வரை பய­ணி­கள் கதி பற்றி அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு எது­வும் இடம்­பெ­ற­வில்லை.

மாயமான விமானம் கன­டா­வில் தயா­ரிக்­கப்­பட்ட 'டுவின் ஒட்­டர்' ரக விமா­னம் ஆகும்.