2021ல் 70% ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்றனர்

2021ல் 70% ஊழியர்கள் சம்பள உயர்வு பெற்றனர்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் இறுக்­க­மான ஊழி­யர் சந்­தைக்­கி­டை­யி­லும் கடந்த ஆண்டு பத்­தில் ஏழு ஊழி­யர்­

க­ளுக்கு சம்­பள உயர்வு கிடைத்­தது. இதற்கு முந்­திய ஆண்டு பத்­தில் ஆறு பேர் சம்­பள உயர்வு பெற்­றி­ருந்­த­னர்.

ஒரே முத­லா­ளி­யி­டம் குறைந்­த­பட்சம் ஓராண்டு காலம் வேலை செய்த ஊழி­யர்­க­ளின் ஒட்­டு­மொத்த சம்­பள விகி­தம் 2021ல் 3.9 விழுக்­காடு வளர்ச்சி கண்­ட­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. இது 2019ஆம் ஆண்­டின் நில­

வ­ரத்தை ஒத்­தி­ருந்­தது.

அத்­து­டன், 2020ஆம் ஆண்­டைக்காட்­டி­லும் இது அதி­கம். கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் மிகுந்­தி­ருந்த அந்த ஆண்­டில் ஒட்­டு­மொத்த சம்­பள வளர்ச்சி 1.2 விழுக்­காட்­டுக்கு சுருங்­கி­யது.

தொழிற்­கூ­டங்­கள் விரி­வான அள­வில் பொரு­ளி­யல் மீட்சி அடைந்­த­தும் ஊழி­யர் பற்­றாக்­

கு­றை­யும் சம்­ப­ளம் உயர்ந்­த­தற்­கான கார­ணங்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­த­போது வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வரத்து குறைந்­த­தால் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது.

முத­லா­ளி­களும் கடந்த ஆண்டு நல்ல பல­ன­டைந்­த­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. பொரு­ளி­யல் 7.6 விழுக்­காடு வளர்ச்சி அடைந்­த­ தால் கிட்­டத்­தட்ட 75 விழுக்­காட்டு முத­லா­ளி­கள், அதா­வது நான்­கில் மூவர் லாபம் ஈட்­டி­னர். இது 2020ஆம் ஆண்­டில் 63 விழுக்­கா­டாக இருந்­தது.

கொள்­ளை­நோய் கார­ண­மாக 2020ஆம் ஆண்டு ஊழி­யர்­க­ளி­டம் அறி­மு­கம் செய்த சம்­பள வெட்டை இந்த முத­லா­ளி­கள் மீட்­கும் நிலை­யில் இருந்­த­தா­க­வும் அறிக்கை கூறி­யது.

எழு­பது விழுக்­காடு ஊழி­யர்­கள் கடந்த ஆண்டு சம்­பள உயர்வு பெற்­ற­னர். 2020ஆம் ஆண்டு இது 60 விழுக்­கா­டாக இருந்­தது.

ஊழி­யர்­க­ளின் சம்­பள வெட்­டும் கடந்த ஆண்டு குறைந்து காணப்­பட்­டது. 2020ஆம் ஆண்டு 23% சம்­ப­ளம் வெட்­டப்­பட்ட நிலை­யில் கடந்த ஆண்டு அது 10 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

கடந்த ஆண்­டில் சம்­பள உயர்வு 3.9 விழுக்­காட்­டுக்கு மீண்­டா­லும் உலக நிதி நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்ட 2010ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் குறை­வாக இருந்­தது. 2010ஆம் ஆண்டு சம்­பள உயர்வு 5.7 விழுக்­காடு வளர்ந்­தது. மீட்சி விகி­தம் குறைந்­த­தற்கு நிதி நெருக்­கடி அள­வுக்கு இல்­லா­மல் நீண்ட காலத்­துக்கு கொள்­ளை­நோய் நீடித்­தது ஒரு கார­ணம். பொரு­ளி­யல் மீட்­சி­யின்­போது சம்­பள உயர்­வில் முத­லா­ளி­கள் மிகுந்த கவ­னத்­து­டன் செயல்­பட்­ட­னர்.

சில்­லறை வர்த்­த­கத் துறை சம்­பள உயர்வு கடந்த ஆண்டு 5.5% என ஆக அதி­க­மான வளர்ச்சி கண்­டது. 2020ஆம் ஆண்டு 2% மட்­டும் இத்­து­றை­யில் சம்­பள உயர்வு இருந்­தது.

2021ஆம் ஆண்டு பொது­வாக எல்­லாத் துறை­க­ளி­லும் சம்­பள உயர்வு பதி­வா­னது.

தக­வல் தொடர்பு போன்ற துறை­களில் சம்­பள உயர்வு 5.1 விழுக்­கா­டாக இருந்­தது. நிதி, காப்­பீட்­டுச் சேவை­களில் அது 4.1 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது. உற்­பத்­தித் துறை­யில் 4% சம்­பள உயர்வு காணப்­பட்­டது. இந்­தத் துறை­கள் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் கிட்­டத்­தட்ட 70 விழுக்­காட்­டுக்­குப் பங்­க­ளிக்­கின்­றன. வெளிப்­புறத் தேவை­க­ளின் வேகம் கார­ண­மாக பல­ன­டை­யக் கூடி­ய­ன­வா­க­வும் இவை உள்­ளன.

கொள்­ளை­நோ­யால் மோச­

மா­கப் பாதிக்­கப்­பட்ட துறை­கள், கட்­டுப்­பா­டு­கள் விலக்­கப்­பட்­டுள்­ள­தால் அதி­க­மான மனி­த­வ­ளத்­துக்­கான தேவை மீண்­டும் ஏற்­படும் என்ற நோக்­கில் சம்­ப­ளத்தை உயர்த்­தின. உதா­ர­ண­மாக, ஹோட்­டல்­கள், தங்­கு­மி­டங்­கள் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கிய தங்­கு­வி­டு­தித் துறை­யில் 1.7 விழுக்­காடு சம்­பள உயர்வு கடந்த ஆண்டு பதி­வா­னது. 2020ஆம் ஆண்டு மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­தால் இத்­து­றை­யில் 5.3 விழுக்­காடு சம்­ப­ளம் வெட்­டப்­பட்­டது.

அதே­போல, போக்­கு­வ­ரத்­துத் துறை 3% சம்­பள வெட்டு என்­

ப­தி­லி­ருந்து மீண்டு கடந்த ஆண்டு 2.8% சம்­பள உயர்வை அறி­வித்­தது. உணவு, பானத் துறை­யின் சம்­பள உயர்வு 1.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 2.6 விழுக்­காட்­டுக்கு வளர்ந்­தது.

சம்­பள உயர்வு இந்த ஆண்­டி­லும் தொட­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு கூறியது. கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக விலக்­கப்­படுவ­தால் ஊழி­யர் சந்­தை­யின் இறுக்­கம் தள­ரும் என்­றும் அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வரக்­கூ­டும் என்­றும் எதிர்­பார்ப்­பு­கள் உள்­ளன.

இருப்­பி­னும், ரஷ்யா-உக்­ரேன் போரும் உலக விநி­யோ­கத் தொட­ரில் ஏற்­படும் இடை­யூ­று­களும் சம்­பள உயர்­வைப் பாதிக்­க­லாம். பண­வீக்­கம் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்பதால் சம்­பள உயர்­வின் வேகம் குறையலாம் என்­றது அமைச்சு.

பொருளியல் வளர்ச்சியால் 4ல் 3 முதலாளிகள் லாபம் ஈட்டினர்