கொவிட்-19 காலத்திலிருந்து மோடி அரசின் செல்வாக்கு உச்சம்

கொவிட்-19 காலத்திலிருந்து மோடி அரசின் செல்வாக்கு உச்சம்

2 mins read

கொவிட்-19 தொற்று தொடங்­கி­யது முதல் பிர­த­மர் நரேந்­திர மோடி அர­சாங்­கத்­தின் செல்­வாக்கு உச்­சத்­தைத் தொட்­டுள்­ள­தாக இந்­தியா முழு­வ­தும் நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பில் தெரியவந்­துள்­ளது.

மோடி தலை­மை­யி­லான பாஜக கூட்­டணி அரசு 2014ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக ஆட்­சிப் பொறுப்பை ஏற்று, 2019ஆம் ஆண்­டின் தேர்­

த­லில் ஆட்­சி­யைத் தக்­க­வைத்­தது. இந்த அர­சாங்­கம் பதவி ஏற்று நேற்றுடன் 8 ஆண்­டு­கள் நிறை­வ­டைவ­தை­யொட்டி 'லோக்­கல் சர்க்­கிள்' என்­னும் ஆய்வு நிறு­வ­னம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­யது.

மோடி அர­சாங்­கம் மீதான மக்­க­ளின் மன­நி­லையை அறிய நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பில் கிட்­டத்­தட்ட 64,000 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

மோடி அரசு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்தி செய்து வரு­வ­தாக 67 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

2020ஆம் ஆண்டு தொற்­று பர­வத் தொடங்­கி­ய­போது மோடி அர­சாங்­கத்­தின் மீதான செல்­வாக்கு 62 விழுக்­கா­டாக இருந்து. இரண்­டாம் அலை கிரு­மிப் பர­வ­லின்­போது அது 51 விழுக்­காட்­டுக்கு இறங்­கி­யது.

பண­வீக்க அதி­க­ரிப்பு, விலை­வாசி ஏற்­றம், வேலை­யில்­லாத நிலை போன்­றவை தொடர்­பான கவ­லை­கள் இருந்­த­போ­தி­லும் மோடி அர­சாங்­கத்­தின் செல்­வாக்கு உயர்­வில் அது பாதிப்பை ஏற்­

ப­டுத்­த­வில்லை என்று ஆய்வு தெரி­வித்­தது.

கிரு­மிப் பர­வல் 3வது அலை ஏற்­பட்­டா­லும் அதனை எதிர்­கொண்டு சமா­ளிக்க மோடி­யின் அர­சாங்­கம் தயா­ராக இருந்­தது என்­றும் பொரு­ளி­யலை அது திறம்­பட நிர்­வ­கித்­த­து என்றும் ஆய்­வில் பங்­கேற்ற பல­ரும் கூறி­னர்.

சமூக நல்லிணக்கத்தை மோடி அரசு மேம்படுத்தியதாக 60 விழுக் காட்டினர் கூறினர். இந்தியாவில் தொழில் தொடங்குவதை அரசு எளிதாக்கி இருப்பதாக 50 விழுக் காட்டினர் தெரிவித்தனர்.

எதிர்­ம­றைக் கருத்­து­களும் ஆய்­வில் பதி­வா­யின. இந்த ஆண்டு தொடங்­கி­யது முதல் வேலை­யில்­லா­தோ­ரின் விகி­தம் 7 விழுக்­கா­டாக இருந்து வரு­கிறது. இதனை மோடி அர­சாங்­கம் சரி­வ­ரக் கண்டு கொள்­ள­வில்லை என்று 47 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­யும் வாழ்க்­கைச் செல­வி­ன­மும் கடந்த மூன்­றாண்­டு­க­ளா­கக் குறை­ய­வில்லை என்று ஆக அதி­க­மாக 73 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

மூன்­றாம் முறை ெவன்று ஆட்­சிப் பொறுப்­பில் நீடிக்க விரும்­பும் மோடி அர­சுக்கு இந்த எதிர்­ம­றைக் கருத்­து­கள் மிக முக்­கி­யம் என ஆய்­வ­றிக்கை கூறி­யது.