உக்ரேன் விவகாரம்: ஆசியா பாடங்களை கற்கவேண்டும்

உக்ரேன் விவகாரம்: ஆசியா பாடங்களை கற்கவேண்டும்

3 mins read
2265558c-697e-4850-a925-e9a558c2db20
தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், ஷங்ரிலா மாநாட்டில் நேற்று நடந்த வட்டார நிலைப்பாட்டை உறுதிப்படுத்து வதற்கான புதிய யோசனைகள் பற்றிய விவாதிப்புக் கூட்டத்தில் உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமைச்சர்:­ அமை­தி­, ஒத்­து­ழைப்­பை­ வளர்த்து பேரி­டரைத் தவிர்க்கவேண்டும்

உக்­ரே­னிய நில­வ­ரத்­தில் இருந்து ஆசியா சரி­யான பாடங்­களைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று வலி­யு­றுத்­தினார்.

நம்­மு­டைய வர­லாற்­றில் மிக ஆபத்­தான கால­கட்­டம் இப்­போது நில­வு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இத்­த­கைய ஒரு நேரத்­தில் நாம் அமை­தி­யை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் பொரு­ளி­யல் சார்புத் தன்­மை­யை­யும் தொடர்ந்து பேணி வளர்த்து பேரி­டரைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் நடந்த மூன்று நாள் ஷங்­ரிலா தற்­காப்பு உச்­ச­நிலை மாநாட்­டின் கடைசி நாளான நேற்று முழு விவா­திப்­புக் கூட்­டத்­தில் பேசிய அவர், ஒரு நாட்டின் இறை­யாண்­மையை, சட்டபூர்வ எல்­லையை எந்­த­வொரு நாடும் மதித்து நடக்க வேண்­டும் என்று அனைத்து ஆசிய நாடு­களும் தெரி­வித்து இருப்பதைச் சுட்டினார்.

எல்லா நாடு­களும் சொல்வ தோடு நின்­று­வி­டா­மல் செய்­கை­யி­லும் இதை உறு­திப்­படுத்தி உக்ரேன் போன்ற நிலைமையைத் தவிர்த்­துக்கொள்­ள வேண்­டும் என்று டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

உல­க­ள­வில் ஒத்­து­ழைப்­பும் நல்ல எண்­ண­மும் மங்கி வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், உக்­ரேன் போரை முடி­வுக்குக் கொண்டு வரு­வது, பேரி­டர்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான முதல் முயற்­சி­யாக இருக்­கும் என்­றார்.

பாது­காப்பைப் பொறுத்­த­வரை ஆசி­யான், ஆஸ்­தி­ரே­லியா, சீனா, இந்­தியா, ஜப்­பான், தென்­கொ­ரியா, நியூ­சி­லாந்து, ரஷ்யா, அமெ­ரிக்கா ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை போன்ற ஏற்­பாடு­களை ஆசியா வலுப்­ப­டுத்த வேண்டும் என்றார் அவர்.

ஆசி­யான் தனக்­குள்­ளும் தனக்கு வெளியே உள்ள வட்­டார சக்­தி­க­ளோ­டும் ஈடு­பா­டு­களைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என்று டாக்­டர் இங் வலி­யு­றுத்­தி­னார்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வர் மீது நம்­பிக்­கை­யைப்­ ப­டுத்­து­வது மூலா­தா­ர­மான ஒன்று என்­று டாக்டர் இங் குறிப்பிட்டார்.

எல்­லா­ரை­யும் உள்­ள­டக்குவது, பல­த­ரப்பு ஏற்­பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து நாம் வலி­யு­றுத்தி வரவேண்­டும் என்­றும் அவர் கேட்டுக்­கொண்­டார்.

ஷங்­ரிலா மாநாட்­டில் கலந்­து­கொண்ட உல­கத் தலை­வர்­கள், மூத்த தற்­காப்பு அதி­கா­ரி­க­ளி­டம் உரை­யாற்­றிய டாக்­டர் இங், "இந்த மாநாடு உங்­க­ளின் தீர்­மா­னங்­களை உறு­திப்­ப­டுத்தி இருக்­கும்.

"உல­கை­யும் நாடு­க­ளை­யும் தொடர்ந்து சுதந்­தி­ர­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் வைத்­தி­ருக்க உங்­களுக்கு இந்த மாநாடு புதிய தெம்பைக் கொடுத்து இருக்­கும்.

"இது சாதிக்­கப்­பட்டு இருந்­தால் நாம் அனை­வ­ருக்­குமே நன்மை," என்று குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, மாநாட்டு முடிவில் பேட்­டி­ய­ளித்த அமைச்­சர் டாக்­டர் இங், ஷங்­ரிலா மாநாட்­டில் அமெ­ரிக்கா, சீனா தற்­காப்பு அமைச்­சர்­கள் விடுத்த அறிக்கை­களைப் பார்க்­கை­யில், ஆசி­யான் நாடு­கள் எந்­த­வொரு பக்­க­மும் சேர்ந்­து­கொள்­ளும்­படி நெருக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெரி­ய­வந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்த ஆண்டு முடி­வில் நடக்­க­வி­ருக்­கும் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டம்-பிளஸ் (ஏடி­எம்எம் பிளஸ்) என்ற ஏற்­பாட்டிற்கு உட்­பட்டு ஆசி­யான் நாடுகள் தொடர்ந்து செயல்­படும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அந்­தச் சந்­திப்­பில் சீனா­வும் அமெ­ரிக்­கா­வும் மீண்­டும் கலந்­து­கொள்­ளும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். டாக்டர் இங் ஷங்­ரிலா மாநாட்டு முடி­வில் 30 நிமி­டம் பேட்டி அளித்­தார்.

மாநாட்­டிற்கு ரஷ்யா அழைக்­கப்­ப­ட­வில்லை. ஏடி­எம்எம் பிளஸ் ஏற்­பாட்­டில் மேலும் பல ஐரோப்­பிய நாடு­களைச் சேர்க்­கும் விதத்­தில் அதை விரி­வு­ப­டுத்­து­வது தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

அந்த ஏற்­பாட்டை விரி­வு­ப­டுத்த கொள்கை அள­வில் ஆசி­யான் அமைச்­சர்­கள் ஒப்­புக்­கொண்டு உள்ளனர் என்று குறிப்­பிட்ட டாக்டர் இங், இருந்­தா­லும் இதன்­தொடர்­பில் மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்டியுள்ளது என்­றார்.

ரஷ்யா மாநாட்­டிற்கு அழைக்­கப்­பட்டு இருக்க வேண்­டுமா என்­பது பற்றி கருத்து கூறிய டாக்­டர் இங், "உக்­ரேன் படை­யெ­டுப்பைக் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில் ரஷ்யா அழைக்­கப்­ப­டா­தது ஏன் என்­பது புரிந்­து­கொள்ள கூடி­யதே. மாநாட்­டில் ரஷ்யா கலந்­து­கொண்­டால் மற்ற சிலர் வெளி­நடப்பு செய்­தி­ருக்­கக்­கூ­டும் என்­பது போன்ற நடை­முறை பிரச்­சினை­களும் இதில் உள்ளன," என்றார்.

உல­கப் பிர­மு­கர்­கள் நேர­டி­யா­கச் சந்­தித்து பேச­வேண்­டும் என்று மிக­வும் விருப்­பத்­து­டன் இருந்­தார்­கள். இந்த விருப்­பத்தை நிறை­வேற்­றும் வகை­யில் அமைந்த இந்த ஆண்டு ஷங்­ரிலா மாநாடு மதிப்­பு­மிக்­கது என்­றும் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் கூறினார்.