மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் இருமடங்கு அதிகரிக்கப்படும்

மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் இருமடங்கு அதிகரிக்கப்படும்

3 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளின் எண்­ணிக்­கையை 2025ஆம் ஆண்­டுக்­குள் கிட்­டத்­தட்ட இருமடங்கு அதி­க­ரிக்க சுகா­தார அமைச்சு இலக்கு கொண்­டுள்­ளது. இதன்­படி இன்­னும் மூன்று ஆண்­டு­

க­ளுக்­குள் 220 மூத்­தோர்

பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது, அடுத்த பத்து ஆண்­டு­களில் தாதிமை இல்­லங்­களில் உள்ள படுக்­கை­

க­ளின் எண்­ணிக்­கையை இரு­

ம­டங்கு அதி­க­ரிக்க அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது. 31,000க்கும் அதி­க­மான படுக்­கை­களை வழங்­கும் நோக்­கில் அமைச்சு செயல்­பட்டு வரு­கிறது.

2010ஆம் ஆண்­டுக்­கும் 2020ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலக்­கட்­டத்­தில் தாதிமை இல்­லங்­களில் உள்ள படுக்­கை­

க­ளின் எண்­ணிக்கை 9,600லிருந்து 16,200க்கு உயர்ந்­தி­ருக்­கிறது. படுக்­கை­க­ளின் எண்­ணிக்­கையை சுகா­தார அமைச்சு 70 விழுக்­காடு உயர்த்­தி­யி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட

பரா­ம­ரிப்பு அமைப்­பின் வரு­டாந்­திர சமூ­கப் பரா­ம­ரிப்­புப் பணித் திட்ட கருத்­த­ரங்­கில் அவர் நேற்று

கலந்­து­கொண்டு பேசி­னார்.

இந்த நிகழ்ச்சி பான் பசிபிக் ஹோட்டலில் நடை­பெற்­றது.

மூத்­தோர் பரி­ம­ரிப்­புச் சேவை­களை ஒருங்­கி­ணைக்க இந்த அமைப்பு அர­சாங்­கத்­தால் அமைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் பலர் மூப்­ப­டைந்து வரு­வ­தா­க­வும் கூடிய விரை­வில் பல­ருக்கு மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளின் சேவை தேவைப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மூப்­ப­டை­வோர், நோய்­வாய்ப்­

ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­

க­ரிக்­கக்­கூ­டும் என்­ப­தால் மருத்து வ­ம­னை­கள், தாதிமை இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு நெருக்­கடி ஏற்­ப­டா­மல் இருக்க கூடு­தல் மூத்­தோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­து­டன், சமூ­கப் பரா­ம­ரிப்புச் சேவை­களை வழங்­கு­வோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் அதி­க­ரிக்­கும் அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி

சிங்­கப்­பூ­ரில் 119 மூத்­தோர்

பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் உள்­ளன.

துடிப்­பு­டன் மூப்­ப­டை­வ­தற்­கான திட்­டங்­களை இந்த நிலை­யங்­கள் வழங்­கு­கின்­றன. பராம­ரிப்­புச் சேவை­கள் பற்­றிய தக­வல்­க­ளை­யும் பரிந்­து­ரை­க­ளை­யும் பெற மூத்­தோர் இந்­நி­லை­யங்­களை நாட­லாம்.

மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் வழங்­கும் சேவை­கள் விரி­வாக்­கம் செய்­யப்­படும் என்று திரு ஓங் கூறி­னார்.

நாள­டை­வில், ஒவ்­வொரு நிலை­ய­மும் 1,000லிருந்து 4,000 மூத்­தோ­ருக்­குப் பொறுப்­பேற்­கும்.

மேலும், மூத்­தோ­ரின் சுகா­தா­ரம் மற்­றும் சமூ­கத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய அடித்­தள அமைப்பு­ கள், தனி­யார் மருந்­த­கங்­கள் போன்ற சமூ­கக் கட்­ட­மைப்­பு­

க­ளு­டன் மூத்­தோர் பராம­ரிப்பு நிலை­யங்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­படும்.

தற்­போ­தைய நில­வ­ரப்­படி, நாட்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள மூத்­தோர் சில மாதங்­

க­ளுக்கு ஒரு­முறை தனி­யார் மருத்­து­வர்­கள் அல்­லது பல­துறை மருந்­த­கங்­க­ளி­லி­ருந்து சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

சிகிச்­சை­க­ளுக்கு இடையே இவர்­கள் மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்­குச் சென்று சுகா­தா­ரம் தொடர்பான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம். அல்­லது துடிப்­பு­டன் மூப்­ப­டை­வ­தற்­காக நடத்­தப்­படும் திட்­டங்­களில் சேர­லாம்.

மூத்­தோ­ரின் உடல்­நி­லை­யைக் கண்­கா­ணிக்­க­வும் மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் உதவ வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு விரும்­பு­வ­தாக

அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

தர­மிக்க அந்­தி­ம­கா­லச் சேவை­க­ளை­யும் விரி­வு­ப­டுத்­தும் அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக திரு ஓங் கூறி­னார்.

"கடந்த சில ஆண்­டு­க­ளாக மருத்­து­வ­ம­னை­க­ளுக்கும் இல்­லங்­க­ளுக்­கும் இடை­யி­லான புதிய பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை நாங்­கள் சோதனை செய்து ஒருங்­

கி­ணைத்­துள்­ளோம்.

"அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்­புச் சேவை­கள் சமூக அடிப்­ப­டை­யில் வேரூன்றி இருக்க கூடு­தல் நட­

வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்," என்று திரு ஓங் தெரி­வித்­தார்.