ஊழியர் பற்றாக்குறையால் மலேசியா கடும் பாதிப்பு

ஊழியர் பற்றாக்குறையால் மலேசியா கடும் பாதிப்பு

3 mins read

ஊழி­யர் பற்­றாக்­குறை கார­ணத்­தி­னால் மலே­சி­யா­வின் செம்­பனை தோட்­டங்­க­ளி­லி­ருந்து பகு­தி­மின்­

க­டத்தி நிறு­வ­னங்­கள் வரை மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

பில்­லியன் கணக்­கான ரிங்­கிட் மதிப்­பி­லான விற்­பனை வாய்ப்­பு­கள் கிடைத்­தும் அவற்றை ஏற்க முடி­யா­மல் அவை தவித்து வரு­கின்­றன. இத­னால் கொவிட்-19 நெருக்கடி­நி­லை­யால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட மலே­சி­யப் பொரு­ளி­ய­லின் மீட்சி தடை­பட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்த விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை மலே­சியா கடந்த பிப்­ர­வரி மாதம் முடி­வுக்­குக் கொண்டு வந்­தது.

இருப்­பி­னும், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மலே­ச­யா­வில் வேலை செய்ய ஒப்­பு­தல் வழங்­கும் அர­சுப் பணி­கள் மிக­வும் மெது­வாக நடப்­ப­தால் எதிர்­பார்த்த அள­வில் நிறு

­வ­னங்­க­ளுக்கு ஆள்­ப­லம் கிடைக்­க­வில்லை.

அது­மட்­டு­மல்­லாது, ஊழி­யர் பாது­காப்பு குறித்து இந்­தோ­னீ­சியா, பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­க­ளு­டன் நடை­பெற்று வரும் பேச்­சு­வார்த்தை இழு­ப­றி­யில் இருப்­ப­தா­லும் ஊழி­யர் பற்­றாக்­குறை நீடிப்­ப­தாக தொழில்­து­றை­கள், நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் அர­ச­தந்­தி­ரி­களும் குறை­கூ­று­கின்­ற­னர்.

ஏற்­று­ம­தியை அதி­கம் நம்­பி­

இருக்­கும் மலே­சியா, ஆலை­களில் பணி­பு­ரிய வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளையே சார்ந்­தி­ருக்­கிறது. அசுத்­த­மான, அபா­ய­க­ர­மான, சிர­ம­மிக்க பணி­கள் என மலே­சி­யர்­கள் வெறுத்து ஒதுக்­கும் பணி­க­ளைச் செய்ய வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி பொரு­ளி­யலை மீண்­டும் உயிர்ப்­பிக்க அனைத்து நாடு­களும் முயன்றுவரும் நிலை­யில், ஊழி­யர் பற்­றாக்­குறை கார­ண­மாக மலே­சிய நிறு­வ­னங்­க­ளால் திட்­ட­மிட்­ட­படி செயல்­பட முடி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நிலை நீடித்­தால் மற்ற நாடு­

க­ளி­டம் தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை இழக்­கும் அபா­யம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று மலே­சி­யா­வின் உற்­பத்­தித் துறை அச்­சம் தெரி­வித்­துள்­ளது.

உற்­பத்­தித் துறை, தோட்­டத் தொழில், கட்­டு­மா­னப் பணி­கள் ஆகிய துறை­களில் பணி­யாற்ற மலே­சி­யா­வுக்கு மேலும் குறைந்­தது 1.2 மில்­லி­யன் ஊழி­யர்­கள் தேவைப்­

ப­டு­கின்றனர்.

கிட்­டத்­தட்ட மூன்று மில்­லி­யன் டன் பயிர் பாழா­கி­வி­டும் நிலை இருப்­ப­தாக மலே­சி­யா­வின் பொரு­ளி­ய­லுக்கு ஐந்து விழுக்­காடு பங்­

க­ளிக்­கும் செம்­ப­னைத் துறை எச்­

ச­ரிக்கை ஒலி எழுப்­பி­யுள்­ளது. அவ்­வாறு நேர்ந்­தால் $5.6 பில்­லி­ய­னுக்கும் அதி­க­மான இழப்பு ஏற்­

ப­டக்­கூ­டும்.

தேவை­யான ஊழி­யர்­கள் உட­ன­டி­யா­கக் கிடைக்­கா­வி­டில் தோரா­ய­மாக $700 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் இழப்பு ஏற்­படும் என்று

மலே­சி­யா­வின் ரப்­பர் கையு­றைத் துறை கவலை தெரி­வித்­துள்­ளது.

475,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவை என்று மலே­சிய நிறு­

வ­னங்­கள் தெரி­வித்­தி­ருந்­த­தா­க­வும் ஆனால் மலே­சி­யா­வில் வேலை செய்ய வெறும் 2,065 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் கடந்த ஏப்­ரல் மாதத்­தில் மலே­சி­யா­வின் மனி­த­வள அமைச்­சர் எம். சர­வ­ணன் தெரி­வித்­தி­ருந்­தார். போதிய தக­வல் அளிக்­கா­த­தா­லும் விதி­

மு­றைக்கு உட்­ப­டா­த­தா­லும் பல­ரது விண்­ணப்­பங்­கள் ஏற்­றுக்­

கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறி­னார்.

போதிய ஊழி­யர்­கள் இல்­லா­மல் திண்­டா­டும் ஜோகூர் ஹோட்­டல்­கள்

இதற்­கி­டையே, மிகக் கடு­மை­யான ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் ஜோகூர் மாநி­லத்­தில் உள்ள ஹோட்­டல்­களும் கடை­களும் திண்­டா­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் கூடு­தல் சம்­ப­ளம் கிடைப்­ப­தா­லும் நாணய மாற்று விகி­தத்­தைக் கருத்­தில் கொண்­டும் அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த பலர் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்ற விரும்­பு­கின்­ற­னர். எனவே, ஜோகூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் வேலைக்கு ஆள் எடுக்க தயா­ராக உள்ள

போ­தி­லும் அங்­குள்ள பல­ருக்கு அதில் நாட்­டம் இல்லை.

"தற்­போது இருக்­கும் ஊழி­யர்­களை வைத்து எங்­க­ளால் சமா­ளிக்க முடி­கிறது. வெவ்­வேறு பிரிவு ­களில் பணி­யாற்­றத் தேவை­யான திறன்­களை எங்­கள் ஊழி­யர்­கள் கொண்­டி­ருப்­ப­தால் எங்­க­ளால் இயங்க முடி­கிறது. புதிய ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­து­வ­தில் சிர­மத்தை எதிர்­கொள்­கி­றோம்.

"ஊழி­யர்­க­ளுக்­காக நாங்­கள் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளு­டன்

போட்­டிபோட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது

"நாணய மாற்று விகி­தம் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் வரு­மா­னம் கிடைக்­கிறது," என்று ஜோகூ­ரின் ஸ்கூ­டாய் நக­ரில் உள்ள உல்­லாச விடுதி ஒன்­றின் தலைமை நிர்­வாகி திரு சனி சூ தெரி­வித்­தார்.

ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யால் ஏற்­பட்­டுள்ள சவால்­மிக்க நிலை அடுத்த சில மாதங்­க­ளுக்கு நீடிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஜோகூர் ஹோட்­டல்­கள் சங்­கத்­தின் தலை­வர் திரு ஐவன் டியோ தெரி­வித்­தார்.

ரிங்கிட்டின் மதிப்பு பலவீனம் அடைந்து வருவதாலும் ஊழியர்களை ஈர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.