சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் கிருமிப் பரவலைத் தடுக்கும்
நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அதிகமானோரை ஈர்க்கக்கூடிய 24 மணி நேர மதுபானக்கூடத்தில் கிருமிப் பரவல் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே கிட்டத்தட்ட 200 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அந்த மதுபானக்கூடத்திற்குச் சென்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏறத்தாழ 10,000 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வசிக்கும் குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து யாரும் வெளியே வர முடியாது என்றும் அவற்றுக்குள் உள்ளே செல்ல முடியாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை சீனா கடந்த வாரம் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 அறவே இல்லாத நிலையை எட்ட இலக்கு கொண்டுள்ள சீனாவுக்கு கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கி
யிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை மோசமாகாமல் இருக்க பெய்ஜிங்கைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு கொவிட்-19
பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயிரக்கணக்கானோர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகளுக்கு
நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஷாங்காய் நகரத்தில் இரண்டு மாதங்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்ததால் சீனாவின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இனி பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்று ஆவலுடன் இருந்த சீனாவுக்கு தலைநகர்
பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள நெருக்
கடிநிலை ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

