கோழி ஏற்றுமதி மீதான தடையில் மலேசியா சில தளர்வுகளைச் செய்துள்ளது.
சிங்கப்பூர் இறக்குமதியாளர்களும் கோழி இறைச்சி வியாபாரிகளும் கம்போங் கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் இறக்கு மதி செய்ய அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு வகைக் கோழி களையும் இறக்குமதி செய்ய நேற்று முதல் மலேசியா மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக 'கீ சோங் ஃபுட்' என்னும் சிங்கப்பூர் நிறுவனம் கூறியது.
இன்றுமுதல் கம்போங் உயிர்க் கோழிகளை விற்பனை செய்யவிருப்பதாக இந்நிறுவனம் டிக்டோக் பக்கத்தில் அறிவித்துள்ளது. வரும் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் கறுப்புக்கோழிகளைஉயிருடன் இறக்குமதி செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.
தடையில் தளர்வுகள் செய் வதற்கான முடிவு இம்மாதம் 8ஆம் தேதி மலேசிய அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக மலேசிய கால்நடை சேவைத் துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை கீ சோங் ஃபுட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுத் தலைவர், 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் காட்டினார்.
சில வகை கோழிகளை இறக்குமதி செய்ய மலேசியா அனு
மதித்தபோதிலும் எத்தனை கோழி களைக் கொண்டு வரலாம் என்
பதன் தொடர்பில் வருத்தம் இருப்
பதாக அவர் கூறினார்.
அத்துடன், தடை தளர்த்தப்பட்டதுமே தங்களது நிறுவனம் கம்போங் கோழிகளை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டது என்றார் அவர்.
ஈரச்சந்தை கோழி இறைச்சி வியாபாரிகள், கோழிச் சோறு விற்பனையாளர்கள் மற்றும் உண வகங்கள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
தடையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'பிராய்லர்' வகைக் கோழிகளை இறக்குமதி செய்வதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் விலைகளை நிலைப்படுத்தவும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்தது.
சிங்கப்பூர் அதன் மொத்த கோழி இறைச்சிக்கான தேவையில் 34 விழுக்காட்டை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. மலேசியாவிலிருந்து பெரும்பாலும் உயிருடன் கோழிகளை இறக்குமதி செய்து, இங்கு வெட்டப்பட்டு, பதப்படுத்தப்படுவது வழக்கம். அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை உறைய வைக்கப்பட்ட கோழிகள்.
தடை காரணமாக சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இருவாரங்கள் கோழி விநியோகம் வீழ்ச்சியைச் சந்தித்தது.