மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவி அவசியம்
செவியரோடோனெட்ஸ் என்னும் முக்கிய தொழில் நகரில் இருந்து தமது படைகள் பின்வாங்கியதாக உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நகரில் ரஷ்யப் படை
யினர் மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலில் உயிர்ச்சேதம் அதிகரித்த வண்ணம் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
16வது வாரமாக நீடிக்கும் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் வலிமையை உக்ரேனியப் படையினர் இழந்ததுபோலத் தோன்றுகிறது. அதன் காரணமாக, தனது எல்லையான கீவ் நகருக்கு மேல் முன்னேறிச் செல்ல அவர்களால் இயலவில்லை.
மாஸ்கோவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தடுக்க உக்ரேனியப் படையினருக்கு மேற்கத்திய நாடுகள் கூடுதல் ஆயுதங்கள் வழங்கி உதவ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இது உணர்த்துவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரேனின் கிழக்கு வட்டாரமான லுஹான்ஸில் உள்ள செவியரோடோனெட்ஸ், லிசிசேன்ஸ் என்னும் இரட்டை நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பல வாரங்
களாக ஈடுபட்டு வருகிறது. ஆயினும் இவை இரண்டும் இப்போது வரை உக்ரேன் வசமே உள்ளன.
செவியரோடோனெட்ஸ் நகரின் 70 முதல் 80 விழுக்காடு வரையிலான பகுதிகளை ரஷ்யப் படை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தபோதிலும் முற்றாக அதனைக் கைப்பற்றவில்லை என்று வட்டார ஆளுநர் செர்ஜி கெய்டே கூறினார்.
"நகரின் எல்லா இணைப்புப் பாலங்களையும் ரஷ்யப் படை அழித்துவிட்டது. அந்த நகரை எட்டுவது இனி சாத்தியமில்லை. அங்குள்ள மக்களை வெளியேற்றுவதும் முடியாத செயல்," என்று "ரேடியோ ஃபிரீ யூரோப்' என்னும் வானொலி யிடம் அவர் கூறினார்.
இதற்கிடையே, அன்றாட போர் நிலவரத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துவரும் திரு ஸெலென்ஸ்கி, நேற்று முன்தினம் உரையாற்றுகையில், "இந்தப் போரில் மனித உயிர்கள் மடிவது அதிகரித்து வருகிறது. இது ஒரு பயங்கரமான நிலைமை," என்றார்.
உக்ரேனியப் படையினரின் உயிரிழப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் வெளியிடுவது அரிது. அந்த வகையில் கடந்த வாரம் அதன் தற்காப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிகோவ் சில தகவல்களை வெளியிட்டார்.
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 100 உக்ரேனிய படையினர் மரண
மடைவதாகவும் 500க்கும் மேற் பட்டோர் காயமடைவதாகவும் அவர் கூறினார்.
இது, ஜூன் 1ஆம் தேதி இருந்த நிலவரத்தைக் காட்டிலும் மோசமானது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 வீரர்கள் உயிரிழப்பதாகவும் 100 வீரர்கள் காயமடைவதாகவும் உக்ரேனிய அப்போது உக்ரேனிய அரசாங்கம் கணக்கிட்டது.

