வாரயிறுதி ஓய்வுநாள்களில் மாற்றம் செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக ஜோகூர் மாநிலம் தெரிவித்து உள்ளது. தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் வாரயிறுதி ஓய்வுநாட்களாக உள்ளன.
ஆனால், தனியார் துறைகளில் சனி, ஞாயிறு ஆகியன ஓய்வு நாள்களாக இருந்து வருகின்றன. இப்படி வெவ்வேறு வாரவிடுமுறை நாள்கள் இருப்பதால் குடும்பங்கள் ஒன்றிணைந்து இருப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி நேற்று இதுகுறித்துக் கூறுகையில், "அர சாங்கத்திலும் தனி யார் துறைகளிலும் வெவ்வேறு ஓய்வுநாள்கள் இருப்பதால் பெற்றோரும் குழந்தைகளும் ஒன்றாக அவற்றைக் கழிக்கமுடிவதில்லை என்பதை அறிவேன். இதனை சரிசெய்வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும். இதற்கான தீர்வு எட்டப்பட்டதும் அதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்," என்றார் அவர்.
வெள்ளி, சனி அரசாங்க விடுமுறை என்பது 2014 ஜனவரி 1 முதல் ஜோகூரில் நடப்பில் இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமை தொழுகையை முஸ்லிம்கள் சிரமமின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக அவ்வாறு செய்யப்பட்டது.

