ஒரு மில்லியன் பேருக்கு அரசு வேலை தர மோடி உத்தரவு

ஒரு மில்லியன் பேருக்கு அரசு வேலை தர மோடி உத்தரவு

2 mins read

இந்­தி­யா­வில் பல்­வேறு அர­சுத் துறை­க­ளி­லும் அமைச்­சு­க­ளி­லும் காலி­யாக உள்ள பணி­யி­டங்­களில் அடுத்த 18 மாதங்­க­ளுக்­குள் பத்து லட்­சம் (1 மில்­லி­யன்) பேரை நிய­மிக்க உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

பாஜக ஆட்சி அமைந்து எட்டு ஆண்­டு­கள் ஆன­போ­தி­லும் நாடு முழு­வ­தும் வேலை­வாய்ப்­பின்மை அதி­க­ரித்து வரு­வ­தாக இந்­தி­யா­விலுள்ள எதிர்க்­கட்­சி­கள் கூறி­வரு­கின்­றன. பல்­வேறு அரசுத் துறை­களில் ஏரா­ள­மான பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­விக்கின்­ற­னர்.

இரு­த­ரப்­பி­லும் தொடர்ந்து இவ்­வாறு கூறப்­ப­டு­வ­தைக் கவ­னித்த பிர­த­மர் மோடி, அர­சுத் துறை

­க­ளி­லும் அமைச்­சு­க­ளி­லும் காலி­யாக உள்ள பணி­யி­டங்­கள் பற்றி ஆய்வு நடத்த உத்­த­ர­விட்­டார்.

மனி­த­வள அமைச்சு இதற்­கான ஆய்வை நடத்­தி­யது.

ஆய்­வின் முடி­வு­க­ளைப் பரி­

சீ­லித்த திரு மோடி, இன்­னும் ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்­குள் ஒரு மில்லியன் பணி­யி­டங்­களை நிரப்­பு­தற்­கான வேலை­களில் உடனே ஈடு­ப­டு­மாறு உத்­த­ர­விட்­டார்.

பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று தனது டுவிட்­ட­ரில் இத­னைத் தெரி­வித்­தது. இதனால், இப்­போது முதல் ஒன்­றரை ஆண்­டு­களில் அவ­ச­ர­மா­கப் பணி­யி­டங்­களை நிரப்ப இந்­திய அர­சாங்­கத்­திற்கு நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்த ஒன்­றரை ஆண்­டு­கா­லக் கெடு முடிந்­த­தும் அடுத்த நான்­கைந்து மாதங்­களில் தற்­போ­தைய மோடி அர­சின் பத­விக்­கா­லம் நிறை­வு­பெ­றும். அதன் பின்­னர், 2024ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வந்­து­வி­டும்.

இந்­தத் தேர்­த­லி­லும் வெற்­றி­பெறவேண்­டும் என்ற நினைப்­பு­டன் பல்­வேறு முயற்­சி­களை மோடி அர­சாங்­கம் முடுக்­கி­விட்டு வரு­கிறது. அதன் ஒரு­ப­கு­தி­யாக நேற்­றைய அறி­விப்பு வெளி­வந்து உள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பிர­சா­ரங்­க­ளின்­போது வேலை­வாய்ப்­பின்மை பேசு­பொ­ரு­ளா­கி­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே இந்த 'மெகா' வேலை­வாய்ப்­புத் திட்­டத்தை பிர­த­மர் மோடி அறி­வித்­துள்­ள­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

மத்­திய பணி­யா­ளர் துறை இணை அமைச்­சர் ஜிதேந்­திர சிங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநி­லங்­க­ள­வை­யில் பேசும்­போது மத்­திய அர­சின் பல்­வேறு துறை­களில் 8.72 லட்­சம் பணி­யி­டங்­கள் காலி­யாக இருப்­ப­தா­கக் கூறி­னார்.

இந்­தப் பணி­யி­டங்­களை விரைந்து நிரப்­பு­வ­தில் திரு மோடி கவ­னம் செலுத்தி வரு­வ­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' கூறு­கிறது. சில மாதங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இதற்­கான வேலை­கள் தொடங்­கி­விட்­ட­தாகவும் அது தெரி­வித்­தது.

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்­தியா கூறுகையில், "காலி­யாக உள்ள பணி­யி­டங்­க­ளின் பட்­டி­யலை அனுப்­பு­மாறு அர­சுத் துறை­களும் அமைச்­சு­களும் கேட்­டுக்­கொள்­ளப்பட்­டன. அந்­தப் பட்­டி­ய­லில் உள்­ள­தற்கு இணங்க காலி இடங்­களை நிரப்­பு­மாறு அமைச்­சு­க­ளின் செய­லா­ளர்­க­ளுக்கு பிர­த­மர் உத்­த­ர­விட்­டி­ருந்­தார். அத­னைத் தொடர்ந்து மீண்­டும் அவர் ஆய்வு நடத்தி புதிய உத்­த­ர­வைப் பிறப்­பித்துள்ளார்," என்று குறிப்பிட்டது.

இந்­நி­லை­யில், பாஜக நாடா­ளு ­மன்ற உறுப்­பி­ன­ரான வருண் காந்தி, தற்­போது பல்­வேறு அர­சுத் துறை­களில் ஒரு கோடிக்­கும் மேல் பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ள­தா­க­வும் இதனை நிரப்­பு­வ­தற்கு ஏற்ற வகை­யி­லான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

ஒவ்­வோர் ஆண்­டும் இரண்டு கோடி வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தாக அரசு அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்­கான வேலை­கள் அசுர வேகத்­தில் நடை­பெற வேண்­டும் என்­றும் அவர் கூறியுள்ளார்.