3ல் 1 பங்கு புளோக்குகளில் டெங்கி ஒழிப்புத் திட்டம்

3ல் 1 பங்கு புளோக்குகளில் டெங்கி ஒழிப்புத் திட்டம்

2 mins read
c8010fb0-85a8-4432-afe7-1facfe8d3703
தேசிய சுற்றுப்புற ஆணையத் தின் மூத்த அறிவியல் வல்லுநரான டெங் லு, அமைச்சர் கிரேஸ் ஃபூவுக்கு தானியக்க கொசு உற்பத்தி சாதனத்தைப் பற்றி விளக்கு கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூலை முதல் விரிவடையும்; மேலும் 1,400 புளோக்குகளை உள்ளடக்கும்

சிங்­கப்­பூ­ரில் டெங்­கி காய்ச்­சலுக்கு எதி­ரான போரில் கொசு மூலம் கொசுவை அழிக்­கும் 'வோல் பாகியா' என்ற செயல்­திட்டம் ஓர் ஆயு­த­மா­கப் பயன்­படுத்­தப்­பட்டு வரு­கிறது.

அந்­தச் செயல்­திட்­டம் மேலும் 1,400 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­களை உள்­ள­டக்­கும் வகை­யில் ஜூலை முதல் நீட்­டிக்­கப்­படும்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப் புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று இதனை அறி­வித்­தார்.

வோல்­பாகியா செயல்­திட்­டம் இப்­போது 1,800 புளோக்­கு­களில்-அதா­வது 160,000 வீடுகளை உள்­ள­டக்கி செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. திட்­டம் நீட்டிக்­கப்­ப­டும்­போது 300,000க்கும் மேற்­பட்ட வீடு­கள் உள்­ள­டக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள வீவக புளாக்­கு­களில் கிட்­டத்­தட்ட 31% புளோக்­கு­களில் (சுமார் 3ல்1) இந்தக் கொசு ஒழிப்­புத் திட்­டம் நடப்­பில் இருக்­கும். டெங்கி தொற்று தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்ற கவலை நில­வும் ஒரு நேரத்­தில் செயல்­திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­வதாக அமைச்சர் கூறி­னார்.

டெங்­கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் வாராந்­திர எண்­ணிக்கை விரை­வில் 2,000ஐத் தாண்­டக்­கூ­டும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் ஜூன் 14ஆம் தேதி வரை டெங்கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 15,000க்கும் அதி­கம்.

டெங்­கி காய்ச்­சல் பொது­வாக ஜூன் முதல் அக்­டோ­பர் வரை தலை­வி­ரித்­தா­டும் என்பதால் இந்த எண்­ணிக்கை மேலும் அதி­கரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படுகிறது.

ஐந்­தா­வது ஆசிய டெங்கி உச்­ச­நிலை மாநாட்­டில் பேசிய அமைச்­சர், வீடு­க­ளி­லும் கட்­டடங்­களி­லும் தண்­ணீர் தேங்கி இருப்­ப­தைத் தவிர்த்­துக்­கொண்டு அதன்­மூ­லம் கொசு இனப்­பெ­ருக்­கம் இடம்­பெ­றா­மல் தனிப்பட்டவர் களும் கட்­டட உரி­மை­யா­ளர்­களும் முழு விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டும் என்றார்.

இதன்­மூ­லம் அவர்­கள் தங்­கள் பங்கை ஆற்­ற­வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நேற்றுடன் முடி­வ­டைந்த அந்த மூன்று நாள் உச்­ச­நிலை மாநாட்டை முதன்­மு­த­லாக இந்த ஆண்டு சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தி­யது.

'ஆசியா டெங்கி அபா­ய­சங்கு, செயற்­குழு' என்ற அமைப்பு அந்த மாநாட்­டுக்கு ஏற்­பாடு செய்­­தது.

அதில் ஆசி­யா­வைச் சேர்ந்த 200க்கும் மேற்­பட்ட மருந்­த­கத் துறை­யி­னர், ஆய்­வா­ளர்­கள், அர­சாங்க சுகா­தா­ரத் துறை­யி­னர், கொள்­கை­களை உரு­வாக்­கும் அதி­கா­ரி­கள் கலந்­து­கொண்டு இந்த வட்­டா­ரத்­தில் டெங்­கிக் காய்ச்­சலை எப்­படி ஒடுக்­க­லாம் என்­ப­தன் தொடர்­பான உத்­தி­களை விவா­தித்­த­னர்.

வோல்­பாகியா திட்­டம் இப்போது மொத்­தம் ஐந்து இடங்­களில் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இந்த எண்­ணிக்கை 13 ஆகும்.

பெரிய அள­வில் பல இடங் களில் திட்­டத்தை அமல்­படுத்து­வ­தால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் பற்றி அதி­கா­ரி­கள் புரிந்­து­கொள்ள இந்தத் திட்ட விரி­வாக்­கம் உத­வும் என்றார் அமைச்­சர்.

திட்ட விரி­வாக்­கத்­திற்கு ஆத­ர­வாக வாரம் ஒன்­றுக்கு உரு­வாக்­கப்­படும் வோல்­பாகியா கொசுக்­க­ளின் எண்­ணிக்­கையை இந்த ஆண்டு முடி­வில் 2 மில்­லி­ய­னில் இருந்து 5 மில்­லி­ய­னாக தேசிய சுற்­றுப்­புற வாரியம் அதி­கப்­ப­டுத்­தும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.