வோல்பாகியா செயல்திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது. வோல்பாகியா என்ற பாக்டீரியா கிருமியுடன் கூடிய ஏடிஸ் வகை ஆண் கொசுக்களை குறிப்பிட்ட இடங்களில் வளரவிடுவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
வோல்பாகியா பாக்டீரியா இல்லாத ஏடிஸ் பெண் கொசுக்கள், அத்தகைய ஆண் கொசுக்களுடன் சேர்ந்து உருவாக்கும் முட்டைகள் பொரியாது.
இதன்மூலம் டெங்கி காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போய்விடும். முடிவில் டெங்கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வழி ஏற்படும்.

