சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிமீது தமிழகத்தில் திருமண மோசடிப் புகார்

சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிமீது தமிழகத்தில் திருமண மோசடிப் புகார்

2 mins read
2ecd1384-1ba4-4f56-a28e-47f4d087bdce
திரு ரஃபீக்கின் முதல் இரண்டு மனைவியரும் தத்தம் குடும்பத்தினருடன் கடந்த வாரம் திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: புதிய தலைமுறை -

பல்­லா­யி­ரம் வெள்ளி மதிப்­பி­லான வர­தட்­ச­ணை­யைப் பெற்று, இரு பெண்­களை மணந்­த­பின் அவர்­களை மண­மு­றிவு செய்து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை அதி­காரி ஒரு­வர்­மீது தமி­ழ­கக் காவல்­துறை­யி­டம் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

திரு முகம்­மது ரஃபீக் அப்­துல் காதர், 39, என்ற அந்­தக் காவல்­து­றைத் துணைக் கண்­கா­ணிப்­பா­ளர் (ஏஎஸ்பி), 2014ல் தஸ்­லிமா என்ற இந்­தி­யப் பெண்ணை மணந்­த­தா­க­வும் அப்­போது பல ஆயி­ரம் மதிப்­பி­லான நகை­களும் ரொக்­க­மும் வர­தட்­ச­ணை­யா­கத் தரப்­பட்­ட­தா­கவும் புதிய தலை­முறை செய்தி தெரி­வித்­தது.

அதன்பின் சிங்­கப்­பூ­ருக்கு அழைத்து வந்த சில நாள்­க­ளி­லேயே தஸ்­லி­மாவை திரு ரஃபீக் இந்­தி­யா­விற்­குத் திருப்பி அனுப்­பி­விட்­ட­தா­க­வும் வர­தட்­ச­ணை­யைத் திருப்­பித் தரா­மல் மண­மு­றிவு கோரி விண்­ணப்­பித்­த­தா­க­வும் அச்­செய்தி கூறி­யது.

இந்­நி­லை­யில், தன்­மீ­தான குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள திரு ரஃபீக், தமது நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் விளை­விக்­க­வும் தம்­மி­டம் இருந்து பணம் பறிக்­க­வும் அவர்­கள் முயல்­வ­தா­க­வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 2016ஆம் ஆண்டு திரு­மணம் நடந்­த­தா­க­வும் 2017ல் மண­மு­றிவு பெற்­ற­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"தமி­ழக ஊட­கச் செய்­தி­கள் தவ­றா­னவை. மண­முறிவு பெற்­ற­பின் வர­தட்­சணையை எடுத்­துக்­கொண்டு தஸ்­லிமா ஊர் திரும்­பி­விட்­டார். அதன்­பின் அவருக்­குத் திரு­ம­ண­மாகி, குழந்­தை­யும் இருக்­கிறது," என்­றார் திரு ரஃபீக்.

பின்­னர் 2020ல் அமீர் நிஷா என்ற இந்­தி­யப் பெண்ணை மணந்­த திரு ரஃபீக், குறு­கிய காலத்­தி­லேயே அவ­ரி­ட­மி­ருந்­தும் மண­மு­றிவு கோரி விண்­ணப்­பித்தார் என்றும் அப்­போ­தும் அவர் வர­தட்­ச­ணை­யைத் திருப்­பித் தர­வில்லை என்­றும் அச்செய்தி கூறி­யது.

இக்­குற்­றச்­சாட்­டை­யும் மறுத்த திரு ரஃபீக், இவ்­வாண்­டில்­தான் மண­மு­றிவு குறித்து இறு­தி­செய்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், உற­வினர் ஒருவரின் திரு­ம­ணத்­திற்­காக இம்­மா­தம் 5ஆம் தேதி திரு ரஃபீக் திரு­வா­ரூர் சென்­றார். இதனை அறிந்த அவ­ரது முன்­னாள் மனை­வி­ய­ரின் குடும்­பத்­தி­னர், அவர் மூன்­றா­வ­தாக ஒரு பெண்­ணைத் திரு­மணம் செய்து, ஏமாற்­றும் நோக்­கில் இந்­தியா வந்­துள்­ள­தா­கக் கூறி­னர்.

கிட்­டத்­தட்ட 100 பேர் ஆயு­தங்­க­ளு­டன் திரண்டு வந்து, முன்­னாள் மனை­வி­யர் இரு­வ­ருக்­கும் தலா ஒரு கோடி ரூபாய் (S$178,000) இழப்­பீடு தர வேண்­டும் என்றும் பணம் தரா­வி­டில் தம்மைக் கொன்று, கட­லில் வீசி­வி­டு­வ­தாக மிரட்­டி­னர் என்றும் திரு ரஃபீக் சொன்னார்.

இத­னை­ய­டுத்து, அவர் அவ­சர அவ­ச­ர­மாக சிங்­கப்­பூர் திரும்­பி­னார்.

இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரம் தொடர்­பில் விசா­ரணை நடந்­து­வ­ரு­வ­தாக சிங்­கப்­பூர் காவல்­துறைப் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.