'அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்'

'அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்'

2 mins read

இலங்­கை­யில் அர­சாங்க ஊழி­யர்­கள் அடுத்த இரண்டு வாரங்­ களுக்கு வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது

எழு­பது ஆண்­டு­கால வர­லாற்­றில் இல்­லாத பொரு­ளி­யல் நெருக்­க­டியில் சிக்கியிருக்கும் அந்­நாட்­டில் எரி­பொ­ருள் அறவே இல்லை. இறக்­கு­மதி செய்­வ­தற்­கான அந்­நிய செலா­வ­ணி­யும் தீர்ந்து விட்­ட­தால் பெட்­ரோல், டீச­லுக்­குக் கடும் தட்டுப் ­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

அர­சாங்­கத்­தின் முறை­யற்ற நிர்­வா­க­மும் கொவிட்-19 கொள்ளை நோய் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பும் இலங்­கை­யின் 22 மில்­லி­யன் மக்­களை கடு­மை­யான நிதி நெருக்­க­டி­யில் தள்­ளி­யுள்­ளது.

எரி­பொ­ருள் விநி­யோ­கிப்­பில் உள்ள வரம்­பு­கள், பல­வீ­ன­மான போக்குவரத்து அமைப்பு, தனி­யார் வாக­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் உள்ள சிர­மம் ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்கொண்டு திங்­கள்­கி­ழ­மை­யில்­ருந்து குறைந்­த­பட்ச ஊழி­யர்­கள் மட்­டும் வேலைக்கு வர அனு­ம­திக்­கும் சுற்­ற­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளதாக பொது நிர்­வா­கமும், உள்­துறை அமைச்சும் கூறி­யது.

ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் அர­சாங்க ஊழி­யர்­களில் பொதுச் சுகா­தார பரா­ம­ரிப்பு போன்ற அத்­தி­யா­வ­சி­யப் பணி­களில் உள்­ள­வர்­கள் மட்­டும் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து வேலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று சுற்­ற­றிக்கை தெரி­வித்தது.

இவ்­வா­ரத்­தின் முற்­ப­கு­தி­யில் எரி­பொ­ருள் தட்­டுப்­பாட்­டைச் சமா­ளிக்க பொதுத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு வாரத்­திற்கு நான்கு நாள் என்ற வேலை முறையை அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக நாடு முழு­வ­தும் உள்ள பெட்­ரோல் நிலை­யங்­களில் பல கிலோ மீட்­டர் நீளத்­துக்கு வாக­னங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. எரி­பொ­ருளை வாங்க பத்து மணி நேரத்­துக்கு மேல் காத்­தி­ருக்க வேண்­டும்.

முன்­ன­தாக, திங்­கள்­கி­ழ­மை­யி­லி­ருந்து பள்­ளி­கள் மூடப்­படும் என்று அர­சாங்­கம் அறி­வித்­தது. மின்­சார வசதி இருந்­தால் இணை­யம் வழி கற்­பிக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யது.

இலங்கையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் பட்டினியால் வாடுவதாக ஐநா எச்­ச­ரித்­த­தைத் தொடர்ந்து பள்­ளி­களை மூட அரசு முடிவு செய்­தது.

ஐவ­ரில் நான்கு பேர், போதுமான உணவு இல்லாததால் ஒரு வேளை உண­வைத் தவிர்த்­து­வி­டு­வ­தா­க­வும் மில்­லி­யன் கணக்­கா­ன­வர்­க­ளுக்கு உதவி தேவைப்­ப­டு­வ­தால் மனி­தாபி ­மான நெருக்­கடி ஏற்­ப­ட­லாம் என்றும் ஐநா கூறி­யுள்­ளது.

ஐநா­வின் உலக உணவு திட்­டத்­தின் மூலம் கொழும்­பில் உள்ள 2,000 கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு உணவு பற்­றுச்சீட்டு விநி­யோ­கிக்­கப்படு­கிறது.

இந்தச் சூழ்நிலையில் இம்­மா­தத்­தி­லி­ருந்து டிசம்­பர் வரை­யில் உண­வ­ளிக்­கும் திட்டத்துக்காக அறு­பது மில்­லி­யன் டாலர் (83.4 மில்­லி­யன் வெள்ளி) திரட்­டப்படும் என்று உலக உணவு திட்­டம் கூறி உள்ளது. இதற்கிடையே நாட்டை பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியாக திங்கள் அன்று அனைத்துலக பண நிதி யத்தின் பேராளர்களை இலங்கை அரசு சந்திக்கிறது.