சிங்கப்பூர் இளையர்களை பாராட்டிய அமைச்சர் ஓங்

சிங்கப்பூர் இளையர்களை பாராட்டிய அமைச்சர் ஓங்

2 mins read
fa4d1e09-11f7-4109-8f31-271cdb8db708
மாணவர்களுடன் கலந்துரையாடிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங். படம்: ரீச், தொடர்பு, தகவல் அமைச்சு -

கொவிட்-19 தொற்று பரவிய காலத்தில் மன வுறுதி, மீள்திறன், சமூகப் பொறுப்பு டன் இருந்தனர்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் இளை­யர்­கள் பல அனு­ ப­வங்­களை இழந்து இருக்­க­லாம். ஆனால் மன­வு­றுதி, மீள்­தி­றன், சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஆகிய பண்­பு­களை இளை­யர்­கள் பெற்­ற­னர் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் பாராட்­டி­யி­ருக்­கி­றார்.

'பல்­க­லைக்­க­ழக குரல்­கள்' எனும் கருத்­த­ரங்­கில் பேசிய அமைச்சர் ஓங், இளை­யர்­கள் சந்­தித்­தப் பிரச்­சி­னை­களைப் பட்­டி­யிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள இளை­யர்­கள் வெளி­நாடு போக முடி­ய­வில்லை. வேலை­யி­டப் பயிற்­சி­கள் ரத்து செய்­யப்­பட்­டன அல்­லது குறைக்­கப்­பட்­டன. பட்­ட­ம­ளிப்பு விழாக்­கள் நடை­பெ­றா­மல் அவற்­றில் பங்­கேற்­கும் வாய்ப்பை இழந்­த­னர். தேசிய பள்ளி விளை­யாட்­டு ­களில் விளை­யாட்டு வீரர்­கள் பங்­கேற்க முடி­ய­வில்லை என்­று அமைச்­சர் கூறினார்.

மரினா பொலி­வார்­டில் உள்ள என்­டி­யுசி நிலை­யத்­தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பல துறைத் தொழிற்­கல்­லூரி, தொடக்­கக் கல்­லூரி, தொழில்­நுட்­பப் பல் கலைக் கழ­கம், பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 250க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இதில் கொள்­ளை­நோய் தாக்­கம் குறித்து மாண­வர்­க­ளி­டம் கருத்­த­றி­யப்­பட்­டது. மேலும் கொவிட்-19 உடன் வாழ்­வ­தில் உள்ள சவால்­களும் கவ­லை­களும் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டன.

தொடர்ந்து பேசிய திரு ஓங், கொவிட்-19 பிந்­திய காலத்­தில் உல­கத்தை தலை­சி­றந்த இட­மாக மாற்­று­வ­தற்­கான தேவை ஏற்­பட்டு உள்­ளது என்­றார்.

கல்வி, போக்­கு­வ­ரத்து, சுகா தாரப் பரா­ம­ரிப்பு ஆகிய துறை களில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்களை­தொட்டும் அவர் பேசினார்.

வட்­டார அர­சி­யல் பிரச்சி னைகள், மக்­க­ளின் வாழ்க்­கையை மறு­வ­டி­வ­மைக்­கும் தொழில்­நுட்­பம், நவீன உல­கின் மோச­மான கொள்­ளை­நோய் நெருக்­கடி போன்ற சவால்­மிக்க சூழ்­நி­லை­யில் இன்­றைய இளை­யர்­கள் வாழ் கின்­ற­னர்.

அதே சம­யத்­தில் தொற்­று­நோய் காலத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்பட்­ட­வர்­க­ளுக்கு உணவு விநி யோகிக்­கப்­பது, தங்­கு­மி­டங்­களில் நோய் பர­வி­ய­போது தங்­க­ளு­டைய இருப்­பி­டத்தை வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் பகிர்ந்துகொண்­டது, தடுப்­பூசி மற்­றும் தொலை­பேசி நேர­டிச் சேவை நிலை­யங்­களில் பணி­யாற்­றி­யது உட்­பட தங்­க­ளைச் சுற்­றி­யுள்­ள­வர்­க­ளுக்கு உதவ மாண­வர்­கள் எடுத்த பல்­வேறு முயற்­சி­களை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"நீங்­கள் எதை இழந்­தி­ருந்­தா­லும் தொற்­று­நோய்க் காலத்­தில் பள்ளி வாழ்க்­கையை கடந்­து­வந்த தலை­முறை என்ற பெருமை உங்­க­ளுக்கு உள்­ளது. நீங்­கள் சில­வற்றை இழந்­தி­ருந்­தா­லும் மன­ வு­றுதி, மீள்­தி­றன், சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் பலவற்றை நிறைய பெற்றுள்­ளீர்­கள்," என்று திரு ஓங் மேலும் சொன்னார்.