'குடும்ப உறவுகள் வலுவடைய கொரோனா தொற்று உதவியது'

'குடும்ப உறவுகள் வலுவடைய கொரோனா தொற்று உதவியது'

2 mins read
147bed8a-fe0c-491f-b58e-33a2a84734aa
தந்தையர் தினத்தையொட்டி செந்தோசாவில் பலவான் கிரீன் இடத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஒரு சிறுமியுடன் உரையாடி மகிழ்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்று, வாழ்க்­கைப் பாணி­யைத் திருத்தி அமைத்­துக் கொண்டு வேலைக்­கும் குடும்ப உற­வுக்­கும் இடை­யி­லான சம­நி­லை­யைச் சீர்­செய்ய ஒரு வாய்ப்­பாக இருக்­கிறது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

வீட்­டி­லி­ருந்தே வேலை பார்ப்­பது போன்ற புதிய ஏற்­பா­டு­கள் கார­ண­மாக குடும்­பத்­தி­னர் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் அதிக நேரம் செல­விட வாய்ப்பு கிடைத்து இருக்­கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

செந்­தோ­சா­வில் பல­வான் கிரீன் இடத்­தில் தந்­தை­யர் தினத்தை முன்­னிட்டு இடம்­பெற்ற ஒரு நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்டு அமைச்­சர் சான் பேசி­னார்.

தந்­தை­யர் தினத்தை நினை­வு­கூ­ரும் வகை­யில் தந்­தை­யர்­க­ளைப் போற்­றிப் புக­ழும் கொண்­டாட்­டங்­கள் கடந்த இரண்டு வார கால­மாக நடந்து வரு­கின்றன. அந்­தக் கொண்­டாட்­டங்­க­ளின் உச்ச நிகழ்ச்­சி­யாக நேற்­றைய கொண்­டாட்­டம் அமைந்­தது.

பல அமைப்­பு­கள் சேர்ந்து ஏற்­பாடு செய்த நேற்­றைய நிகழ்ச்சி, 'தந்­தை­யர் சாதிக்­கி­றார்­கள்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் நடந்­தது. தந்­தை­யர்­க­ளை­யும் அவர்களின் முயற்­சி­க­ளை­யும் அங்­கீ­க­ரித்­துச் சிறப்­பிக்­கும் வகை­யில் இந்த ஆண்டுக் கொண்­டாட்­டங்­கள் இடம்­பெ­று­ கின்­றன.

"கொரோனா தொற்று கார­ண­மாக கடந்த இரண்­டாண்டு காலம் நமக்கு மிகச் சிர­ம­மான கால­கட்­ட­மாக ஆகி­விட்­டது.

"இன்­ன­மும் பல நில­வ­ரங்­கள் நிச்­ச­ய­மில்­லா­மல் இருக்­கின்­றன. இருந்­தா­லும்கூட கடந்த இரண்டு ஆண்டு காலம் இதர சில வழி­களில் நமக்கு வரப்­பி­ர­சா­த­மாக அமைந்து இருக்­கிறது என்றே நான் கரு­து­கிறேன்," என்றாரவர்.

அந்­தக் கால­கட்­டத்­தில் நம் முன்­னுரி­மை­களில் ஒரு­மித்த கவ­னத்­தைத் திருத்தி அமைத்து மறு­சிந்­த­னைக்கு அவற்றை உட்­ப­டுத்த முடிந்­தது என்­று அவர் கூறினார்.

ஆகை­யால், எந்­த­வொரு நெருக்­ க­டி­யை­யும் வீண­டிக்கக்கூடாது என்று கூறிய அமைச்சர், வாழ்க்கைப் பாணி­யைத் திருத்தி அமைத்­துக்கொண்டு, சொந்த குடும்ப உறவைச் சீர­மைக்க கிடைக்­கக் கூடிய வாய்ப்­பு­களில் அது ஒன்று என்­பதே தன் கருத்து என்­றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் அமைச்சர் சானும் பல குடும்பத்தின ரும் செந்தோசாவில் தொங்குபாலம் ஒன்றில் ரிப்பன்களைப் பறக்கவிட்டு குடும்பத்திற்கான தங்களின் கடப் பாட்டை மறுஉறுதிப்படுத்தினார் கள்.