தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராட்டத்திற்கு இடையில் 'அக்னிபாதை' ஆட்சேர்ப்பு அறிவிப்பு

2 mins read
06560e91-5204-4610-b87b-382f892f2660
முழு அடைப்பு காரணமாக டெல்லி-குருகிராம் விரைவுச்சாலையில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: பிடிஐ -

'அக்­னி­பாதை' ஆட்­சேர்ப்­புத் திட்­டத்­திற்கு எதி­ரா­கப் போராட்­டங்­கள் தொடர்ந்­து­வ­ரும் நிலை­யில், அம்­மு­றை­யின்­கீழ் முதல் சுற்று ஆட்­சேர்ப்­புக்­கான அறி­விப்பை இந்­திய ராணு­வம் வெளி­யிட்­டுள்­ளது.

அதன்­படி, அடுத்த மாதத்­தில் இருந்து ஆட்­சேர்ப்­புக்­கான பதிவு தொடங்­க­வி­ருக்­கிறது.

'அக்­னி­பாதை' திட்­டத்­திற்கு எதி­ராக நேற்று நாடு தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அதன் கார­ண­மாக நாட்­டின் பல பகு­தி­களி­லும் கடு­மை­யான போக்­கு­வரத்து நெரி­சல் ஏற்­பட்­டது; பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பல சந்­தை­கள் மூடப்­பட்­டன.

அந்த நான்­காண்டு 'அக்­னி­பாதை' வேலைத் திட்­ட­மா­னது, நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு எவ்­வித வேலை உத்­த­ர­வா­த­மும் வழங்­காது என்­றும் ஓய்­வூ­தி­யப் பலன்களோ பணிக்கொடையோ கிடைக்­காது என்­றும் கூறி, ராணு­வத்­தில் சேர விரும்பும் இளை­யர்­கள் போராடி வரு­கின்­றனர்.

அத்­திட்­டத்­தின்­கீழ் ராணு­வத்­தில் இணை­வோ­ரில் 25 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே வழக்­க­மான 15 ஆண்­டு­கால சேவைக்­குத் தேர்வு­செய்­யப்­ப­டு­வர். 'அக்னி வீரர்­கள்' என அழைக்­கப்­படும் அந்த 25 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஓய்­வு ஊதி­யச் சலு­கை­கள் உண்டு.

'அக்­னி­பாதை' திட்­டம் குறித்து இம்­மா­தம் 15ஆம் தேதி அறி­விப்பு வெளி­யா­ன­தை­ய­டுத்து, பல மாநி­லங்­க­ளி­லும் போராட்­டம் வெடித்­தது. அதன்­படி, 17.5-21 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­களே முப்­ப­டை­களில் சேர முடி­யும் என்று முத­லில் அறி­விக்­கப்­பட்­டது. பின்­னர் உச்ச வயது வரம்பு 23ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

இதனிடையே, நேற்றைய முழு அடைப்பு காரணமாக 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப் பட்டன.

காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ரயில் மறி­ய­லில் ஈடு­பட்ட அக்­கட்­சி­யி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர். அரி­யா­னா­வின் பல இடங்­க­ளி­லும் சாலை­களை மறித்து, இளை­யர்­கள் போரா­டி­னர். கேரளா, தெலுங்­கானா, மேற்கு வங்­கம், ராஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­க­ளி­லும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. பய­ணி­க­ளின் பாது­காப்பை முன்­னிட்டு, சென்னை ரயில் நிலை­யங்­களில் குறைந்த அளவிலேயே நடை­மேடை நுழை­வுச்­சீட்­டு­கள் வழங்கப்பட்டன.