அமைச்சர் ஓங்: 80,000 மூத்த குடிமக்கள் இன்னும் கூடுதல் தடுப்பூசி போடவில்லை

அமைச்சர் ஓங்: 80,000 மூத்த குடிமக்கள் இன்னும் கூடுதல் தடுப்பூசி போடவில்லை

2 mins read

சிங்­கப்­பூ­ரில் 60 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டைய மூத்த குடி­மக்­களில் 80,000 பேர் இன்­னும் முத­லா­வது கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

இரண்டு தவணை கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மூத்த குடி­மக்­க­ளைக் காட்­டி­லும், மூன்­றா­வது தடுப்பூசியாக கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் கொவிட்-19 தொற்­றால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­படும் அல்­லது உயி­ரி­ழக்­கும் அபா­யம் மூன்று மடங்கு குறைவு என்று அமைச்­சர் ஓங் கூறி­யி­ருக்­கி­றார்.

மூன்று தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொண்ட 1,000 மூத்த குடி­மக்­களில் மூன்று பேர் மட்­டுமே அப்­படி மோச­மாக பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளது.

மாறாக, இரண்டு தடுப்­பூ­சி­கள் மட்­டும் போட்­டுக்­கொண்­டோ­ரி­டத்­தில் அவ்­வி­கி­தம் 1,000 பேருக்­குப் பத்­துப் பேராக உள்­ளது.

அதே­போல, தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளா­தோ­ரி­டத்­தில் அந்த அபா­யம் மிக­வும் அதி­கம். அதா­வது, அத்­த­கைய 1,000 பேரில் 40 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட வேண்­டிய அள­விற்கு கடு­மை­யான தொற்­றுக்கு ஆளாக வாய்ப்­புள்­ளது.

ஆத­லால், அடுத்த கொவிட்-19 அலைக்கு முன்­ன­தாக மூத்த குடி­மக்­கள் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி அமைச்­சர் ஓங் 'டிக் டாக்' காணொளி ஒன்­றின் வழி­யாக வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் ஒன்­பது மாதங்­களுக்­கு­முன் கூடு­தல் தடுப்­பூசி போடும் பணி தொடங்­கி­யது. மூத்த குடி­மக்­கள், முதி­யோர் பரா­மரிப்பு நிலை­யங்­களில் இருப்­போர், நோயெ­திர்ப்­பாற்­றல் குறை­வாக இருப்­போர் ஆகி­யோ­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

இப்­போ­தைக்கு, நாட்­டின் மொத்த மக்­கள்­தொ­கை­யில் 77 விழுக்­காட்­டி­னர், அதா­வது கிட்­டத்­தட்ட 4.2 மில்­லி­யன் பேர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­னர்.

மூத்த குடி­மக்­கள் எந்த ஒரு தடுப்­பூசி நிலை­யத்­திற்­கும் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என்­றும் விரை­வில் நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுவினர் பணி­யில் ஈடு­படுத்­தப்­படுவர் என்­றும் திரு ஓங் தெரி­வித்து இருக்­கி­றார்.

"அடுத்த ஓரிரு மாதங்களில், புதிய கொவிட்-19 அலையை நாம் எதிர்­பார்க்­க­லாம். ஆனா­லும், தடுப்­பூ­சி­ போட்டுக்கொள்வதன்மூலம் நாம் பாது­காப்­பாக இருக்­க­லாம் என்­ப­தால் அது­பற்­றிக் கவ­லைப்­படத் தேவை­யில்லை," என்­றும் அமைச்­சர் கூறி­னார்.