உலகளாவிய நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் உள்ள குறைந்த வருமான குடும்பங்களுக்கும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கும் உதவ $1.5
பில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று அறிவித்தார்.
$400 பெறுமானமுள்ள பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு ரொக்கமாக வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக $300 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் குறைந்த வருமான, நடுத்தர வருமான ஊழியர்களும் ஓய்வுபெற்று வருமானம் இல்லாமல் இருப்போரும் இதன்மூலம் பலனடைவர்.
அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்துக்கும் $100 பெறுமானமுள்ள பயனீட்டுக் கட்டண வழங்கு தொகை வழங்கப்படும். உள்ளூர் நிறுவனங்
களுக்கும் கூடுதல் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. உதாரணத்துக்கு, தகுதி
பெறும் டாக்சி ஓட்டுர்களுக்கும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒருமுறை நிவாரணத் தொகையாக $150 தரப்படும்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலையைச் சமாளிக்க இந்தத் தொகை வழங்கப்படுகிறது. கோழி ஏற்றுமதிக்கு மலேசியா விதித்துள்ள தடையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள 11 கோழி அறுப்பு நிலையங்களிடமிருந்து ஒரு மாதத்துக்கான வெளிநாட்டு ஊழியர் தீர்வை வசூலிக்கப்படாது.
உணவுச் சேவைகள், உணவு உற்பத்தி, சில்லறை வர்த்தகம் ஆகியவற்றைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர உள்ளூர் நிறு
வனங்களுக்குப் புதிய எரிசக்தித் திறன் மானியம் வழங்கப்படும்.
குறைந்த அளவிலான எரிசக்தி யைப் பயன்படுத்தும் சாதனங்
களைப் பயன்படுத்தவும் அதி
கரிக்கும் எரிசக்தி கட்டணங்
களால் ஏற்படும் செலவுகளைக் குறைக்கவும் 70 விழுக்காடு வரை ஆதரவு வழங்கப்படும்.
இந்த ஆதரவு தொகுப்புத் திட்டத்துக்காக அரசாங்க கையிருப்பு நிதியில் இருந்து நிதி எடுக்கப்
படாது என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவைவிட பொருளியல் மீட்சி அதிகமாக இருந்ததால் கடந்த நிதி ஆண்டில் அரசாங்கத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைத்ததும் இதற்குக் காரணம் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் கூறினார்.
"கொவிட்-19 கிருமிப் பரவலை எதிர்கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை முழுமையாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படவில்லை. ஓமிக்ரான் கிருமி வகை எதிர்பார்த்த அளவுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாததே இதற்குக் காரணம். எனவே, தற்போதைய நிலவரப்படி கூடுதல் தொகை ஒதுக்கப்படாது," என்று திரு வோங் தெரிவித்தார்.
இன்னும் சில காலத்துக்குப் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்பதையும் அது சீரடைவதற்கு முன்பு கூடுதல் ஏற்றம் காணக்கூடும் என்பதையும் சிங்கப்பூரர்கள் புரிந்துகொண்டு அதற்குத் தயாராக வேண்டும் என்றார் அவர்.
பணவீக்கத்தால் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்தோரும் எளிதில் பாதிப்
படையக்கூடிய பிரிவினரும் அதிகம் பாதிப்படைவர் என்பதால் அதை எதிர்கொள்ள காம்கேர் சமூக நலத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குறுகிய கால, நடுத்தர கால உதவித் திட்டமும் நீண்டகால உதவித் திட்டமும் நிரந்தரமாக மேம்படுத்தப்படும்.
இதன்மூலம் நீண்டகால
உதவித்திட்டம் பெறும் ஓர் உறுப்பினர் கொண்ட குடும்பத்துக்கு மாதந்தோறும் $640 வழங்கப்படும். தற்போது $600 மட்டுமே வழங்கப்படுகிறது.
குறைந்த அளவிலான ஓய்வூதி யத்தைப் பெறுபவர்களுக்கான படித்தொகை, மாதாந்திர ஓய்வூதிய வரம்பு தலா $30 உயர்த்தப்படும். படித்தொகை $350ஆகவும் மாதாந்திர ஓய்வூதியம் $1,280ஆகவும் உயர்த்தப்படும்.
குறைந்த வருமான ஊழியர்
களுக்காகப் படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்தும். தகுதிபெறும் சம்பள உயர்வுகளுக்குத் தேவையான நிதியில் 75 விழுக்காட்டுத் தொகையை அரசாங்கம் வழங்கும். மொத்த மாதச் சம்பளமாக $2,500 வரை ஈட்டும் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
மாதந்தோறும் $2,500க்கு அதிகமாகவும் $3,000 வரையிலும் ஈட்டும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுத் தொகையில் 45 விழுக்காட்டை அரசாங்கம் தரும்.
குறைந்தது ஆறு மாதங்
களுக்கு வேலை இல்லாமல் தவிக்கும் மூத்தோரையும் உடற்குறைஉள்ளோர் மற்றும் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையானவர்களையும் வேலையில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் வேலை வளர்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடப்பில் இருக்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.
உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் நிறுவன நிதித் திட்டம்-வர்த்தகக் கடனும் மேம்
படுத்தப்படும். அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை $5 மில்லியனி
லிருந்து $10 மில்லியனுக்கு உயர்த்தப்படும். வர்த்தகங்களுக்குத் தேவையான மூலதனம் தேவைப்படும் நிறுவனங்கள் இப்போதிலிருந்து செப்டம்பர் இறுதி வரை தற்காலிக கடன் இணைப்புத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
இந்தத் திட்டம் காலாவதியானதும் தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் நடைமுறை மூல
தனக் கடன் மேம்படுத்தப்படும். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அதிகபட்ச கடன் தொகை $300,000லிருந்து $500,000க்கு ஏற்றம் காணும். அதிகரிக்கும் விலைவாசி குறித்து சிங்கப்பூரர்கள் பலர் கவலைப்படுவது
தமக்குத் தெரியும் என்று திரு வோங் கூறினார்.
"பணவீக்கத்துடன் சேர்த்து வேறு பல சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். அதிகரிக்கும் வெப்பநிலை, பருவநிலை மாற்றம், நாடுகளுக்கு இடை
யிலான போட்டித்தன்மை மற்றும் பதற்றநிலை ஆகிய சவால்கள் உள்ளன. அதுமட்டுமல்லாது, உலக நாடுகளிடையிலான பிளவு மோசமடைகிறது.
எனவே, புதிய உலகச் சூழலுக்கு ஏற்ப நம்மை மறுசீரமைத்துக்கொண்டு மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று திரு வோங் கூறினார்.