ஏறத்தாழ 30 ஆண்டுகள் இல்லாத அளவில் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ரயில் சேவை ஊழியர்கள் இறங்கி உள்ளனர்.
அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பிரிட்டனில் விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்து
உள்ளது. கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் பிரிட்டனில் பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தவிர்க்க நேற்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, 50,000க்கும் அதிகமான ஊழியர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஊழியர்களுக்கு
மிகவும் குறைந்த அளவில்
சம்பள உயர்வு வழங்குவது
ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று பிரிட்டனின் ஆர்எம்டி தொழிற்சங்க தலைமைச் செய
லாளர் மிக் லிஞ்ச் அதிருப்தி தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்துச் சேவையில் பெருமளவிலான இடையூறைத் தவிர்க்க பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் கிரான்ட்ஸ் ஷேப்ஸ் கூறினார். திட்டமிட்ட சேவைகளில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு சேவைகள் தொடரும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்தியாவசியச் சேவை ஊழியர்களையும் முக்கிய போக்குவரத்துப் பாதைகளையும் கருத்தில் கொண்டு இச்சேவைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கிளாஸ்டன்பரி இசை விழா போன்ற முக்கிய
நிகழ்ச்சிகள் தடைபடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாகப் போக்குவரத்துச் சேவைகள் தடைபடும் என்பதால் தேசிய தேர்வு எழுத இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று பள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறைகூறியுள்ளார். இந்த வேலை நிறுத்தப் போராட்டம், ரயில் சேவை ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க காரணமாக இருக்கும் பயணிகளுக்குஅசௌகரியத்தைத் தருவதாக வும் வர்த்தகங்களை முடக்கு
வதாகவும் அவர் சாடினார்.

