தமிழ்நாட்டின் மிக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரில் ஒருவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், அந்த இருவரும் நீயா நானா என்று இரண்டில் ஒன்று பார்க்க களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
கட்சியின் பொதுக்குழு, செயற்குழு பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூட இருந்தது. அதில் ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானம் தாக்கலாகி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிந்தது.
பழனிசாமி வசம் கட்சி போவதை விரும்பாத ஓ பன்னீர்செல்வம் இன்றைய கூட்டத்தை நடக்க விடாமல் செய்ய முயன்று அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் முன்னதாக அறிவித்தார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வானகரத்தில் நடத்த முடிவுசெய்து பொதுக்குழு உறுப்பினர்கள் 2,640 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வேறு யாரும் வரக்கூடாது என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் அழைப்பிதழும் அடையாள அட்டையும் விநியோகிக்கப்பட்டு உள்ளன. அதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் படங்களும் இருக்கின்றன.
அதிமுகவுக்கு எடப்பாடியும் பன்னீரும் கூட்டாக தலைமைப் பொறுப்பை ஏற்று வருகிறார்கள்.
ஆனால், ஒரே உறைக்குள் இரு கத்திகள் இருக்கக்கூடாது என்று அந்தக் கட்சியினரே சில காலமாகவே தெரிவித்து வந்தார்கள். ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதிமுகவில் உள்ள நிர்வாக ரீதியிலான 75 மாவட்டங்களில் 68 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடியை ஆதரிக்கிறார்கள்.
என்றாலும் ஒற்றைத் தலை மையை பன்னீர் விரும்பவில்லை. தனக்குக் கட்சியில் முக்கிய பொறுப்பு தொடர்ந்து இருந்துவர வேண்டும் என்கிறார் பன்னீர்.
அதிகாரத்தைக் கைப்பற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் அணுக்கத் தோழியான சசிகலாவுடன் சேர்ந்து செயல்படக்கூட அவர் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு நேற்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.
பொதுக்குழுவில் பெரும்பான் மைக்கு ஏற்ப எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படலாம் என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது. பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பார் என நீதிமன் றத்தில் அவரின் தரப்பு கூறியது.