அமைச்சர் பியூஷ் கோயல்: தமிழ்நாடு உலக உற்பத்தி மையமாகும்

அமைச்சர் பியூஷ் கோயல்: தமிழ்நாடு உலக உற்பத்தி மையமாகும்

2 mins read

ஜவுளி, நீர் இரைக்கும் மோட்­டார் இயந்­திரங்­கள், மாவு அரவைக் கருவி­கள், முக்கிய உதிரி பாகங்கள் தயாரிப்­பில் உலக மைய­மாக தமிழ் நாடு உரு­வா­கும் என்று இந்­திய ஜவுளி, வர்த்­தக தொழில் அமைச்­சர் பியூஷ் கோயல் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்குத் தமிழ்­நாடு ஊக்­கு­விப்­பாகத் திக­ழும் என்று அவர் உறு­தி­பட கூறி­னார்.

இந்­தி­யப் பொரு­ளி­ய­லின் மதிப்பு இப்­போது 3 டிரி­லி­யன் டால­ராக (ஒரு டிரி­லி­யன் என்­பது மில்­லி­யன் மில்­லி­யன்) இருக்­கிறது என்­றும் அது விரை­வில் 30 டிரிலி யன் டால­ரா­கும் என்­றும் அமைச்­சர் கோயல் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தியா உல­கச் சந்­தை­யில் எல்லா துறைகளை­யும் வளைத்­துப் பிடிக்க விரும்­பு­கிறது என்­றார் அவர்.

இந்­திய ஜவு­ளித் துறை உள் நாட்­டில் அதிக அள­வில் வேலை­களை உரு­வாக்­கும் ஆற்­ற­லைக் கொண்­டது என்று தெரி­வித்த அமைச்­சர், பல நாடு­க­ளு­டன் தாராள வர்த்­தக உடன்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள இந்­தியா விரும்பு­வ­தா­க­வும் இதன் தொடர்­பில் அந்த நாடு­க­ளு­டன் பேச்சு நடத்தி வரு­வ­தா­க­வும் கூறி­னார்.

இந்­திய ஜவுளிப் பொருள்கள் உலக சந்­தை­களைத் தீர்வை எதுவும் இல்­லா­மல் எட்ட அந்த உடன்­பாடு­கள் வழிவகுக்கும் என்று அமைச்­சர் தெரி­வித்­த­தாக அதி­கா­ர­பூர்வ அறிக்கை குறிப்­பிட்­டது. கோவை­யில் ஜவு­ளி ­சந்தை 2022ஐ தொடங்­கி­வைத்து அமைச்­சர் பேசி­னார்.

இந்­தி­யப் பிர­த­மர் மோடி உலகத் தலை­வர்­க­ளு­டன் நல்லுறவை நிலை­நாட்டி வரு­கி­றார் என்­றும் அதன் கார­ண­மாக உலக அள­வில் இந்­தி­யா­வுக்கு மதிப்­பும் மரி­யா­தை­யும் அதி­க­மாகி இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்­திய ஜவு­ளித்­துறை 440 பில்­லி­யன் டாலர் ஏற்­று­மதி சாதனை நிகழ்த்தி இருப்­ப­தாகவும் அதற்கு அர­சாங்­கத்­தின் பல்­வேறு கொள்­கை­களும் இந்­தத் தொழில்­துறை மேற்­கொண்ட கடும் முயற்சி­களும் கார­ணம் என்றாரவர்.

சம்பந்­தப்­பட்ட தரப்­பு­கள் அனைத்­தும் ஒற்­றுமை­யாகப் பாடு­பட்டு இந்­தி­யாவை உல­கி­லேயே ஆகப் பெரிய உற்­பத்தி மை­ய­மாக ஆக்க முன்­வ­ர­வே­ண­டும் என்று அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார். ஜவுளி தொழில்துறையினருடன் அவர் பேச்சு நடத்தினார்.