துணைப் பிரதமர் வோங்: தற்போதைக்கு கட்டுப்பாடுகளை முடுக்கிவிடத் தேவையில்லை

தற்போதைக்கு கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடத் தேவையில்லை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

வருங்காலத்தில் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் விழிப்புடன் இருப்பதையும் பரிசோதனையை மேற்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்திய திரு வோங், அடுத்த மாதம் மதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 'ஏஆர்டி' பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும் என்றார்.

நீ சூன் சென்ட்ரலில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்திற்குச் சென்றபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பிஏ.4, பிஏ.5 வகை ஓமிக்ரான் கிருமிப் பரவலால் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதாக திரு வோங் சொன்னார்.

கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் மோசமாக நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறி ஏதும் இப்போதைக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைகளால் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது; அதனால் கட்டுப்பாடுகளை முடுக்கிவிடாமல் இந்தக் கிருமிப் பரவல் அலையை சிங்கப்பூரால் கடந்துசெல்லமுடியும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குடன் தடுப்பூசி நிலையத்திற்குச் சென்ற திரு வோங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!