உதய்பூரில் தையல்காரர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு

உதய்பூரில் தையல்காரர் கொலை: என்ஐஏ விசாரிக்க உத்தரவு

2 mins read
a04d7b5e-f635-47dc-bef9-e50f0b65d816
உதய்பூரில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த ஆடவரின் உடல், தகனம் செய்வதற்காகக் கொண்டுசெல்லப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ராஜஸ்­தா­னின் உதய்­பூ­ரைச் சேர்ந்த தையல்­கா­ரர் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தன் காணொ­ளி­யைப் பதி­வுச் செய்து அதைச் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­ட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்கு அனைத்­து­ல­கத் தொடர்­பு­கள் இருக்­கின்­ற­னவா என்­பது குறித்து தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) விசா­ரணை நடத்­து­மாறு இந்­திய உள்­துறை அமைச்­ச­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

ராஜஸ்­தான் மாநி­லம் உதய்­பூர் மாவட்­டத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த இந்த அதிர்ச்­சித் தாக்­கு­தலில் தையல்­கடை நடத்­தி­வ­ரும் கன்­னையா லால் தேலி என்­ப­வரை இரண்டு மர்ம நபர்­கள் கடை புகுந்து வலுக்­கட்­டா­ய­மா­கக் கடை­யி­லி­ருந்து வெளியே இழுத்து வந்து வாளால் அவ­ரைத் தாக்கிக் கொன்­ற­னர்.

இதன் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாக வலம்­வந்­ததை அடுத்து மக்­க­ளி­டையே பெரும் பீதி­யைக் கிளப்­பி­யுள்­ளது. பதற்ற நிலை­யைக் கட்­டுப்­ப­டுத்த காவல் துறை­யி­னர் முயன்று வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொல்­லப்­பட்­ட­வர் சர்ச்­சைக்­கு­ரிய கருத்து கூறிய பாஜ­க­வின் முன்­னாள் உறுப்­பி­னர் நூபுர் சர்­மா­விற்கு ஆத­ர­வாக சமூக வலைத்­த­ளங்­களில் கருத்து வெளி­யிட்­டார் என்­றும் இத­னால்­தான் அவர் படு­கொலை செய்­யப்­பட்­டார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

நூபுர் சர்­மா­விற்கு ஆத­ரவு அளிக்­கும் யாவ­ருக்­கும் இதே நிலை­தான் என்று ஆயு­தங்­கள் ஏந்­தி­ய­வாறு எச்­ச­ரிப்­ப­தாக அந்­தக் காணொளி அமைந்­துள்­ளது.

இதற்­கி­டையே இந்­திய பிர­த­மர் நரேந்­திர மோடிக்­கும் காணொ­ளி­யில் கொலை மிரட்­டல் விடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இளை­ஞ­ரைக் கொடூ­ர­மான முறை­யில் கொன்­ற­தா­கக் கூறப்­படும் கொலை­யா­ளி­கள் முகம்­மது ரியாஸ், கௌஸ் முகம்­மது ஆகிய இரு­வ­ரும் மோட்­டார் சைக்­கி­ளில் தப்­பிச் செல்ல முயன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சம்­பவ இடத்­துக்கு தேசிய புல­னாய்வு முக­வை­யைச் சேர்ந்த குழு ஒன்றை உள்­துறை அமைச்­ச­கம் அனுப்­பி­யுள்­ளது. இச்­சம்­ப­வம் தீவி­ர­வா­தத்­து­டன் தொடர்­பு­டை­யதா என்­னும் கோணத்­தில் விசா­ரணை நடந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் சம்­பவ இடத்­தில் கூடு­த­லாக 600 காவல்­துறை அதி­கா­ரி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

உதய்­பூர் மாவட்­டத்­தில் உள்ள ஏழு காவல் நிலை­யங்­க­ளுக்­கும் உட்­பட்ட பகு­தி­களில் ஊர­டங்கு உத்­த­ர­வும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.