தமிழகத்தில் மௌனமாக 4வது கொரோனா அலை: மருத்துவர்கள், வல்லுநர்கள் அச்சம், கவலை

தமிழகத்தில் மௌனமாக 4வது கொரோனா அலை: மருத்துவர்கள், வல்லுநர்கள் அச்சம், கவலை

2 mins read
fd308b0e-b02b-40e6-9c26-2e260eeaed10
தமிழகத்தில் பொது இடங்களில் பரிசோதனை தீவிரப் படுத்தப்படு கிறது. முகக்கவசம் கட்டாய மாக்கப் பட்டு உள்ளது. படம்: தமிழக ஊடகம் -

தமிழ்­நாட்­டில் காய்ச்­சல், தொண்டை வலி போன்ற அறி­கு­றி­க­ளு­டன் கூடிய மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது. ஆனால் பல­ரும் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்துகொள்ள முன்­வ­ர­வில்லை என்­ப­தால் பாதிப்­பு­கள் பற்றி வெளியே தெரி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், மாநி­லத்­தில் கொவிட்-19 நான்­கா­வது அலை மௌன­மாக தலைதூக்கிவரக்கூடிய ஆபத்து உள்­ள­தாக மருத்­து­வர்­களும் தொற்­று­நோய் வல்­லு­நர்­களும் அச்­சம், கவலை தெரி­வித்தனர்.

பரி­சோ­த­னை­யில் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­வது, மருத்து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறு­வது போன்ற அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அடுத்த அலை ஏற்­பட்டு இருக்­கி­றதா இல்­லையா என்­பதை முடிவு செய்­து­வி­ட­லாம்.

ஆனால் போதிய அள­வுக்­குப் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­ட­வில்லை என்­ப­தால் இப்­போது தமிழ்­நாட்­டில் ஏற்­பட்டு இருக்­கக்­கூ­டிய 4வது தொற்று அலை வெளியே தெரி­யா­மல் மௌனமாக பர­வக்­கூடி­ய­தாக இருக்­க­லாம் என்று அவர்­கள் கூறு­கி­றார்­கள்.

தமிழ்­நாட்­டில் பிப்­ர­வரி 23ஆம் தேதிக்குப் பிறகு முதல்­மு­றை­யாக தொற்­று­டன் கூடி­ய­வர்­க­ளின் எண்ணிக்கை கடந்த புதன்­கி­ழமை 10,000ஐ தாண்­டி­யது.

ஜூன் 1ஆம் தேதி வாரம் சரா­சரி­யாக 80 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­டது. இந்த எண்­ணிக்கை நாள் ஒன்­றுக்கு சரா­ச­ரி­யாக 1,285 ஆக இப்­போது இருக்­கிறது.

பரி­சோ­தனை மூலம் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­வோ­ரின் வாராந்­திர விகி­தம் சீராக அதி­க­ரித்து வரு­கிறது. நாள் ஒன்­றுக்கு 25,000 பிசி­ஆர் பரி­சோ­த­னை­கள் இப்­போது நடத்­தப்­ப­டு­கின்­றன.

அந்த மாநி­லத்­தில் அன்­றா­டம் குறைந்­த­பட்­சம் 3 லட்­சம் பரி­சோதனைகளை நடத்த முடி­யும்.

யாருக்­கா­வது தொற்று அறி­குறி­கள் தென்­பட்­டால் அவர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­வில்லை என்­றா­லும்­கூட தங்­க­ளைத் தாங்­களே தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டால் போதும் என்று பொதுச் சுகா­தா­ரத் துறை இயக்­கு­நர் டாக்­டர் டி எஸ் செல்­வ­வி­நா­ய­கம் தெரி­வித்­தார்.

­மக்­கள் முகக்­க­வ­சம் அணி­வதை உறு­திப்­படுத்த அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக களத்­தில் இறங்கி இருப்­பதாக சுகா­தாத் துறை அமைச்­சர் மா சுப்­பி­ர­ம­ணி­யன் கூறினார். மாநிலத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 1,827 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.