தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திடீர் வெள்ளம்: அமர்நாத் யாத்திரை சென்ற 16 பேர் உயிரிழப்பு; 40 பேரைக் காணவில்லை

1 mins read

இம­ய­ம­லை­யில் அமர்­நாத் பனி­லிங்கக் கோவில் அருகே நேற்று முன்­தினம் மாலை வேக­வெ­டிப்­பால் ஏற்­பட்ட திடீர் வெள்­ளத்­தில் குறைந்­தது 16 பேர் உயி­ரி­ழந்­த­னர்; 65 பேர் காய­ம­டைந்­த­னர். இன்­னும் 40 பேரைக் காண­வில்லை.

கிட்­டத்­தட்ட 15,000 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­படுத்­தப்­பட்­ட­னர்.

"தேசிய பேரி­டர் மீட்­புப் படை­, இந்­திய ராணு­வம். எல்­லைப் பாது­காப்­புப் படை, மத்­திய தயார்­நிலை காவல்­படை ஆகி­யவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன," என்று தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யின் தலைமை இயக்­கு­நர் அதுல் கர்­வால் தெரி­வித்­தார்.

"காய­ம­டைந்­த­வர்­கள் ஹெலி­காப்­டர் மூல­மாக மீட்­கப்­ப­டு­கின்­ற­னர். யாத்­திரை நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலே செல்ல வேண்­டாம் என்று பக்­தர்­களை அறி­வுறுத்தி வரு­கி­றோம்," என்று இந்தோ-திபெத்­திய எல்­லைப் படை­யின் பேச்­சா­ளர் விவேக் குமார் பாண்டே கூறி­னார்.

திடீர் வெள்­ளத்­தில் பல கூடா­ரங்­கள் அடித்­துச்­செல்­லப்­பட்­ட­தாக மீட்­கப்­பட்­ட­வர்­களில் சிலர் தெரி­வித்­த­னர்.

திடீர் வெள்­ளத்­தால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்பு குறித்து அதி­பர் ராம்­நாத் கோவிந்­தும் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் வருத்­தம் தெரி­வித்­த­னர். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

43 நாள் அமர்­நாத் யாத்­திரை, கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்­கி­யது.