பிரதமர் வலியுறுத்து: மக்கள் செயல் கட்சிக்குப் புதுப்பிப்பு, முழு ஆற்றல், மக்களுடன் பிணைப்பு தொடர்ந்து தேவை

பிரதமர் வலியுறுத்து: மக்கள் செயல் கட்சிக்குப் புதுப்பிப்பு, முழு ஆற்றல், மக்களுடன் பிணைப்பு தொடர்ந்து தேவை

3 mins read
5491400a-8908-4890-ba83-685f9eb062f0
ஓய்வுபெற்ற மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் லீ சியன் லூங் (நடு). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாடு எதிர்­நோக்­கும் சவால்­கள், மிரட்­டல்­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் சமாளித்து மக்­க­ளுக்­குச் சிறந்த சேவை­யாற்­றவும் எதிர்­கா­லத்தை உறு­திப்­ப­டுத்­த­வும் அரசு- மக்களுக்கு இடையிலான நம்பிக்கை, பன்மய பின்­னணி, அனு­ப­வம் உள்ள எம்பிக்கள், கட்­சிப் புதுப்­பிப்பு ஆகி­யவை அவ­சி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­தி கூறி இருக்கிறார்.

கடந்த பொதுத்­தேர்­த­லில் ஓய்­வு­பெற்ற 20 மக்­கள் செயல் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்களுக்கு நன்றி தெரி­விக்­கும் விருந்­தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், கொவிட்-19 தொற்­றைச் சமா­ளிப்­ப­தில் நாம் நெடும் முன்­னேற்­றம் கண்டு இருப்­ப­தற்கு அர­சுக்கும் மக்­க­ளுக்­கும் இடை­யில் நிலவும் வலு­வான நம்­பிக்­கையே முக்­கிய கார­ணம் என்­றார். அதே­போல் சமூ­கத்­தில் நில­வும் நம்­பிக்­கை­யும் அதற்­குக் கார­ணம் என்று அவர் கூறி­னார்.

"அந்த நம்­பிக்கை கொரோனா தொற்று காலத்­தின்போது ஏற்­பட்ட ஒன்­றல்ல.

"வழி­வ­ழி­யாக மசெக தலை­மு­றைத் தலை­வர்­கள், நாடாளுமன்ற உறுப்­பி­னர்­கள் பல ஆண்­டு­கா­ல­மாக பட்ட பாடு­களும் அவர்­கள் பேணி பலப்­ப­டுத்­திய பிணைப்பும் மசெ­க­வுக்கு வாக்­க­ளித்த மக்­களும் கட்சி­யும்­ அ­தற்­குக் கார­ணம்," என்­றார் அவர்.

"அதன் கார­ண­மா­கவே தேர்­தல்­களில் வெற்றி பெற்று மசெக சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு குறிப்­பாக நெருக்­கடி காலத்­தில் சேவை­யாற்ற முடிந்து வந்துள்ளது," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

ஓய்­வு­பெற்ற மசெக உறுப்­பி­னர்­க­ளைப் போலவே கட்சிக்குப் புதிய தலை­மு­றை­யினர் தொடர்ந்து தேவை என்ற திரு லீ, நேர்மை, கடப்­பாடு, ஆற்­றல், பன்­மய அனு­ப­வ­மும், பின்­ன­ணி­யும் கொண்­ட­வர்­கள் சேவை­யாற்ற முன்­வ­ர­வேண்­டும் என்றார்.

"மசெக உறுப்­பி­னர்­கள் எப்­போ­துமே வெள்ளை உடை­யில் காணப்­ப­டு­வார்­கள். ஆகை­யால், அவர்­க­ளின் யோச­னை­க­ளிலும் கண்­ணோட்­டங்­க­ளி­லும் ஒரே மாதி­ரி­யாக இருப்­பர் என சிலர் நினைக்­கக்­கூ­டும்.

"ஆனால், அப்­படி நினைப்­பது தவறு. பன்­மய குழுவைத் தேர்­த­லில் நிறுத்­தவே முடிந்த வரை நாம் பாடு­ப­டு­கி­றோம்.

"இதன்­மூ­லம் நாடா­ளு­மன்ற உறுப்­பினர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் வேறு­பட்ட சிந்­தனையை வெளிப்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்­றார் அவர். இந்­தப் பன்­ம­யத்தை நாம் தொடர்ந்து கட்­டிக்­காத்து வர­வேண்­டும். அடுத்த பொதுத் தேர்­த­லில் கூடு­மானவரை தலை­சி­றந்த அணியை கள­மி­றக்க வேண்­டும்," என்று திரு லீ கூறி­னார்.

சவால்­மிக்க நேரங்­களில் கட்­சியை எப்­போ­தும் புதுப்­பித்து ஆற்­றல்­மிக்­க­தாக, சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் அணுக்­கத் தொடர்­புள்­ள­தாக நாம் வைத்­தி­ருக்க வேண்­டும் என்றும் திரு லீ வலியுறுத்தினார்.

"இந்­தப் பணியை இப்­போ­தைய நாடாளுமன்ற உறுப்­பி­னர்­கள், ஓய்வு பெறும் உறுப்­பி­னர்­க­ளி­டம் இருந்து மேற்­கொண்டு இருக்­கி­றார்­கள். பதவி வில­கிய உறுப்­பி­னர்­க­ளின் சாத­னையைப் புதிய உறுப்­பி­னர்­கள் மேலும் பலப்­ப­டுத்­து­வார்­கள். இதன் வழி மசெக தொடர்ந்து சிங்­கப்­பூ­ரருக்குச் சேவை­யாற்ற முடி­யும். எதிர்­கா­லத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யும்," என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற வளாகத்தில் நடந்த நேற்றைய நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் திரு லீ 20 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ஆற்றிய தொண்­டு­க­ளை­யும் அர்ப்­ப­ணிப்­புச் சேவை­ க­ளை­யும் பெரி­தும் பாராட்­டி­னார்.

அந்த உறுப்­பி­னர்­கள் சென்ற பொதுத் தேர்­த­லில் ஓய்வு பெற்­றுக்­கொண்­ட­னர். ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங், நாடா­ளு­மன்ற முன்னாள் துணை நாய­கர் சால்ஸ் சோங், முன்­னாள் அமைச்­சர்­க­ளான கோ பூன் வான், லிம் ஹங் கியாங், லிம் சுவீ சே, யாக்­கோப் இப்­ரா­ஹிம் ஆகி­யோர் அவர்­களில் அடங்­கு­வர்.

நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­ச­ரும் விருந்து ஏற்­பாட்­டுக் குழுவின் தலை­வ­ரு­மான சீ ஹொங் டாட், ஓய்­வு­பெற்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார்.

புதிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களுக்கு வழி­காட்டி உத­வும் அந்த உறுப்­பி­னர்­களை அவர் பாராட்­டி­னார். ஓய்வுபெற்ற நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­க­ளுக்கு நேற்­றைய நிகழ்ச்­சி­யில் திரு லீ கடி­தத்­தை­யும் நினை­வுப்­பொருளை­யும் வழங்கி சிறப்­பித்­தார்.