இந்தோனீசியாவிலிருந்து வருகிறது கோழி இறைச்சி

இந்தோனீசியாவிலிருந்து வருகிறது கோழி இறைச்சி

2 mins read
32e77ce1-8948-428d-83b3-1c94ee17e29b
சிங்கப்பூருக்கு இந்தோனீசியாவிலிருந்தும் கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனீசியாவில் உள்ள 'சிபிஐ' எனும் கோழிப் பண்ணை தலைமையகத்தில் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சியை இந்தோனீசிய அமைச்சர் சியாருல் யாசின் லிம்போ (வெள்ளைச் சட்டை) நேரில் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ருக்கு கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்­யும் முக்­கிய நாடான மலே­சியா, கடந்த மாதம் அதற்கு தடை விதித்­த­தால் உள்­ளூ­ரில் தட்டுப்­பாடு ஏற்­பட்­டது.

இத­னால் இதர நாடு­க­ளி­லி­ருந்து கோழி இறைச்சி இறக்­கு­மதி செய்­யும் நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் எடுத்­திருந்தது.

இதன் ஒரு பகு­தி­யாக இந்­தோனீ­சி­யா­வி­லி­ருந்து கோழி இறைச்சி இறக்­கு­மதி செய்ய ஜூன் 30ஆம் தேதி சிங்­கப்­பூர் உணவு அமைப்பு அனு­மதி வழங்­கி­யது.

இந்த நிலை­யில் இந்தோனீ சியாவில் இருந்து உறைய வைக்கப்­ பட்ட கோழி இறைச்­சியை சிங்கப்­ பூ­ருக்கு ஏற்­று­மதி செய்­யும் பணி அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கப் பட்டுள்­ளது.

ஏறக்­கு­றைய இரண்டு பில்­லி­யன் ருப்பியா மதிப்­புள்ள (S$187,749) 50,000 கிலோ கோழி இறைச்சி புதன்­கி­ழமை மாலை ஒருங்­கி­ணைக் கப்­பட்ட சரோ­யன் போக்­பண்ட் இந்­தோ­னீ­சியா (சிபிஐ) கோழிப் பண்ணையிலி­ருந்து அனுப்பி வைக்­கப்­பட்­டது.

வடக்கு ஜகார்த்­தா­வில் உள்ள தஞ்­சுங் பிரி­யோக் துறை­மு­கம் வழி­யாக வெள்­ளிக்­கி­ழமை கோழி இறைச்சி சிங்­கப்­பூர் வந்து சேரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வுக்கு அடுத்­த­தாக முதல் முறை­யாக இந்தோ­னீசி­யா­வின் 'சிபிஐ', சியோ­மாஸ் அடி­சட்வா ஆகிய நிறு­வ­னங்­கள் நடத்­தும் கோழிப் பண்­ணை­களிலிருந்து கோழி இறைச்சி இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு முழு­வ­தும் 'சிபிஐ' நிறு­வ­னம் மட்­டும் சிங்­கப்­பூ­ருக்கு ஆயி­ரம் டன் உறை­ய­வைக்­கப்­பட்ட கோழி இறைச்­சியை விநி­யோ­கிக்க­விருக்கிறது.

சென்ற புதன்கிழமை வடக்கு ஜகார்த்தாவில் உள்ள 'சிபிஐ' தலை மையகத்தில் சிங்கப்பூருக்கு முதல் ஏற்றுமதியை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் ஹாடி குணாவான் ஜோ, ஏற்றுமதி சிறப் பான முறையில் நீடிக்க வேண்டும் என்றார்.

உலகளாவிய உணவு நெருக்கடி களுக்கு இடையே இந்த ஏற்றுமதி இந்தோனீசியாவின் கோழிப் பண்ணைகளுக்கு புதிய எதிர் காலத்தை ஏற்படுத்தித் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார். ஆயிரம் டன் கோழி இறைச்சியின் ஒப்பந்த மதிப்பு 40 பில்லியன் ருப்பியா என்று நிகழ்ச்சி யில் பேசியபோது இந்தோனீசிய வேளாண் அமைச்சரான சியாருல் யாசின் லிம்போ சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் தவிர ஜப்பான், தீமோர் லெஸ்டே, பாப்புவா நியூ கினி, கத்தார் ஆகிய இடங் களுக்கும் 'சிபிஐ' கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது.