'பயங்கரவாத மிரட்டல் அதிகமாக உள்ளது'

'பயங்கரவாத மிரட்டல் அதிகமாக உள்ளது'

1 mins read

சிங்­கப்­பூ­ரில் பயங்­க­ர­வாத மிரட்­டல் தொடர்ந்து அதி­க­மா­கவே உள்­ளது என்­றும் கொவிட்-19 கிருமிப்­ப­ர­வல் காலத்­தில் நடப்­பில் இருந்த அனைத்­து­ல­கப் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் வேளை­யில் பயங்­க­ர­வாத நட­வடிக்­கை­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்றும் உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை அதன் ஆண்­ட­றிக்­கை­யில் எச்­ச­ரித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­கள், பெரும்­பா­லும் தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்­திற்­குச் சுய­மாக ஈர்க்­கப்­படும் தனி­ந­பர்­க­ளி­ட­மி­ருந்து எழு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்­டுக்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரில் 45 பேர், உள்­நாட்டு பாது­காப்­புச் சட்­டத்­தின்கீழ் தடுப்­புக் காவல் அல்­லது கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின்கீழ் வைக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில் 33 பேர் சிங்­கப் பூரர்­கள், 12 பேர் வெளி­நாட்­டி­னர் என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை குறிப்­பிட்­டது.

மேலும் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­யு­தவி செய்த குற்­றங்­க­ளுக்­காக 13 பேர் தண்­டிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில் மூவர் சிங்­கப்பூரர்­கள், 10 பேர் வெளி­நாட்­ட­வர்­கள் ஆவர்.

தீவி­ர­வா­தப் போக்­கைப் பின்­பற்­று­வோர் கிரு­மித்­தொற்­றுக் காலத்­தின்­போது உரு­வாக்­கிய திட்­டங்­களை தற்­போது நடை முறைப்படுத்­தக்­கூ­டும் என்று அது தெரி­வித்­தது.

எனி­னும், தற்­போது சிங்­கப்­பூர் மீது பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் உடனடியாக நடத்­தப்­ப­டு­வ­தற்­கான எந்த குறிப்­பிட்ட வேவுத் தக­வ­லும் இல்லை என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை கூறி­யது. ஆனால் அத்­த­கைய மிரட்­டல் குறித்­து தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­கு­மாறு அது பொது­மக்­க­ளைக் கேட்டுக்­கொண்­டது.