புதிய அதிபரைத் தேடும் படலம் தொடங்கியது

புதிய அதிபரைத் தேடும் படலம் தொடங்கியது

2 mins read

இலங்­கை­யின் இடைக்­கால அதி­ப­ராக அந்­நாட்­டின் பிர­த­ம­ரான ரணில் விக்­ர­ம­சிங்க பதவி

ஏற்­றுள்­ளார். கோத்­த­பாய ராஜ­பக்சே தமது பதவி வில­கல் கடி­தத்தை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைத்தார்.

அவரது பதவி லிலகல்

கடி­தத்தை இலங்கை நாடா­ளு­

மன்­றம் ஏற்­றுக்­கொண்­டதை அடுத்து, ரணில் விக்­ர­ம­சிங்க இடைக்­கா­ல அதிபராக நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.

"அதி­பர் பத­வி­யி­லி­ருந்து கோத்­தபாய சட்­ட­பூர்­வ­மாக விலகி ­விட்­டார். அவ­ரது பதவி வில­கல் கடி­தத்தை நான் ஏற்­றுக்­கொண்­டேன். இனி அர­ச­மைப்­புச் சட்­டப்­படி புதிய அதி­பரை நிய­மிக்­கும் பட­லம் தொடங்­கு­கிறது. புதிய அதி­பரை விரை­வா­கத் தேர்ந்­

தெ­டுத்து நிய­மிக்க வேண்­டும். இலங்கை நீண்ட ஜன­நா­யக வர­லாறு கொண்ட நாடா­கும். எதிர்­

வ­ரும் தேர்­தல் ஜன­நா­ய­கத்­தின் உயர் நெறி­மு­றை­க­ளு­ட­னும் வெளிப்­ப­டை­யா­க­வும் நடை­பெ­றும்," என்று இலங்கை நாடா­ளு­மன்ற நாய­கர் மகிந்த யாப்பா அபே­வர்த்­தன உறுதி அளித்­தார்.

நாடா­ளு­மன்­றம் இன்று கூடும் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம்

அபே­வர்த்­தன நேற்று தெரி­வித்­தார். புதிய அதி­ப­ருக்­கான வாக்­

க­ளிப்பு இம்­மா­தம் 20ஆம் தேதி­யன்று நடை­பெ­றும் என்­றார் அவர்.

"ஏழு நாள்­க­ளுக்­குள் புதிய அதி­பரை நிய­மிக்க இலக்கு கொண்­டுள்­ளேன். இது நிறை­வேற அனைத்­துத் தரப்­பி­ன­ரும்

ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டும்," என்று அபேவர்த்தன கேட்டுக் கொண்டார். அடுத்த அதி­ப­ராக ரணில் விக்­ர­ம­சிங்க பொறுப்­பேற்க வேண்­டும் என இலங்­கையை ஆளும் கட்சி விரும்­பு­கிறது. ஆனால் ராஜ­பக்சே குடும்­பத்­தி­ன­ரைப் போலவே ரணி­லும் பதவி துறக்க வேண்­டும் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் போர்க்கொடி உயர்த்தி­ உள்­ள­னர். இந்­நி­லை­யில், அதி­பர் தேர்­தல் வேட்­பா­ள­ராக திரு சஜித் பிரே­ம­தாசவை எதிர்க்­கட்­சி­கள் முன்­மொ­ழிந்­துள்­ளன. மூத்த நாடாளுமன்ற உறுப்­பி­ன­ரான டலஸ் அல்­ஹபெ­ரு­ம­வும் அதி­ப­ரா­கும் சாத்­தி­யம் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோத்­த­பாய, ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்­குப் பதி­லாக இரு­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்க எதிர்க்­கட்­சி­கள் விரை­கின்­றன. இது சாத்­தி­ய­மாகும் வகையில் அனைத்­துக் கட்­சிக­ளையும் கொண்ட அர­சாங்­கத்தை அமைப்­ப­தில் அவை தீவி­ரம் காட்டி

வரு­கின்­றன.

வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டியை இலங்கை எதிர்­கொள்­கிறது. அத்­தி­யா­வ­

சி­யப் பொருள்­கள்­கூட இல்­லாத நிலை ஏற்­பட்டு, நாடு நொடித்துப் போக ராஜ­பக்சே குடும்­பத்­தி­ன­ரின் முறை­யற்ற ஆட்சிதான் கார­ணம் என்று இலங்கை மக்­க­ளின் மன­தில் கொஞ்­சம் கொஞ்­ச­மாக எட்­டிப் பார்த்த தீப்­பொறி கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு கொழுந்­து­விட்டு எரி­யத் தொடங்­கி­யது. நாடெங்­கும் நடந்த ஆர்ப்­பாட்­டங்­க­ளின் உச்­ச­கட்­ட­மாக அண்­மை­யில் அதி­பர் மாளி­கைக்­குள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அத்து­ மீறி நுழைந்­த­னர். அங்­கி­ருந்து தமது குடும்­பத்­தா­ரு­டன் மாலத் தீவுக்­குத் தப்­பிச் சென்ற கோத்­த­பாய, நேற்று முன்­தி­னம் சவூதி விமா­னம் மூலம் சிங்­கப்­பூர்

வந்­த­டைந்­தார். கோத்­த­பா­ய­வுக்கு அடைக்கலம் தர­வில்லை என்­றும் அவர் தனிப்­பட்ட முறை­யில் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் தெளி­வுப்­ப­டுத்­தி­யுள்­ளது.