ஆத்திரத்தில் ஆவேசம்: இருவருக்குக் கைவிலங்கு

ஆத்திரத்தில் ஆவேசம்: இருவருக்குக் கைவிலங்கு

1 mins read
11754bc6-579d-4bcc-ba81-20a054740f18
துவாஸ் பாலத்தில் காரின் எண் பலகையைப் பெயர்த்தெடுத்து முன்கண்ணாடி மேல் வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த ஆண், கார் ஓட்டுநரை நோக்கி தகாத செய்கைகளைக் காட்டினார். அவரையும் மலேசிய காவல்துறை கைது செய்துள்ளது. படங்கள்: Our Singapore/ ஃபேஸ்புக் -
multi-img1 of 2

மலே­சி­யா­வை­யும் சிங்­கப்­பூ­ரை­யும் இணைக்­கும் துவாஸ் பாலத்­தில் முறை­யற்ற வகை­யில் நடந்­து­கொண்ட இருவரை மலே­சிய காவல்­து­றை­யி­னர் நேற்று முன்­தினம் இரவு ஜோகூர் சோத­னைச்­சா­வ­டி­யில் கைது செய்­த­னர். கைது செய்யப்பட்ட ஆண் சிங்கப்பூரர்.

கடந்த வார­யி­றுதியில் நடந்த

அந்­தக் குற்­றச்­செ­யல் தொடர்­பாக ஆண், பெண் இரு­வ­ரைத் தேடி வரு­வ­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

பாலத்­தில் இருந்­த­போது தங்­கள் சிவப்பு நிற 'கியா' காரை கறுப்பு நிற 'டொயோட்டா' கார் இடை

மறித்து, உர­சிச் சென்று சேதப்

படுத்­தி­ய­தால் கோப­ம­டைந்­த­தா­கக் கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் தெரி­வித்­த­னர் என மலே­சிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

சினங்­கொண்ட அந்­தப் பெண் தமது காரை உர­சிச் சென்ற வாக­னத்­தின் எண் பல­கை­யைப் பெயர்த்­தெ­டுத்து அதன் முன்­கண்­ணாடி மேல் விட்­டெ­றி­யும் காட்சி காணொளியில் பதி­வா­னது.

அத்­து­டன் நின்­று­வி­டா­மல் அந்த வாக­னம் அங்­கி­ருந்து போக முடி­யா­த­படி அதை இடை­ம­றித்­தார்.

அப்­பெண்­ணு­டன் இருந்த ஆண் அந்த டொயோட்டா காரின் ஓட்­டு­நரை நோக்கி முறை­யற்ற செய்­கை­க­ளைக் காட்­டி­னார்.

இவற்­றைக் காட்­டும் காணொளி இணை­யத்­தில் வலம் வந்­தது.