சிங்கப்பூரில் எல்லா வயது மக்களின் மனநலனையும் பாதுகாப்
பதற்காக நேற்று புதிய செயல்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
'எஸ்ஜி மனநலக் கட்டமைப்பு' என்ற அந்தத் திட்டத்தின் முக்கியமான ஓர் அங்கமாக சமூக நல்வாழ்வுக் குழுக்கள் அமையும். பல குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் அந்தக் குழுக்களில் சமூகத் தொண்டூழியர்களும் அடித்தளத் தலைவர்களும் சமூக சேவை பங்காளிகளுடன் சேர்ந்து ஒன்று திரண்டு இருப்பார்கள்.
அவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடும் மக்களுக்கு ஆலோசனை கூறி, ஆதரவளித்து உதவுவார்கள்.
அத்துடன், நல்வாழ்வு செயல்திட்டங்களையும் அவர்கள் நிர்
வகித்து நடத்துவார்கள்.
புதிய கட்டமைப்பில் சமூகசேவை அமைப்புகள், மனநல ஆலோசனை அமைப்புகள், போன்ற பங்காளித்துவ அமைப்புகள் இருக்கும்.
கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் அதற்குத் தலைமை வகிப்பார்.
புதிய கட்டமைப்பை இந்த அமைச்சு மேற்பார்வையிடும். மன உளைச்சல், கவலைகளுடன் போரா டும் மக்களுக்கு அருகே இருந்து உதவும் முதல் நிலை ஆதரவாளராக அக்கம்பக்கத்தினரும் சமூகத்தினரும் இருப்பார்கள் என்று அமைச்சு குறிப்பிட்டது.
நல்வாழ்வுக் குழு ஒவ்வொன்றும் அது அதற்கு உரிய அடித்தள பிரிவுகளின் தேவைக்கு ஏற்ப செயல்திட்டங்களையும் இலக்குகளையும் கொண்டிருக்கும் என்று துணை அமைச்சர் கூறினார்.
முன்னோடி முயற்சியாக அந்தக் குழுக்கள் முதலில் பல அடித்தள பிரிவுகளில் பரிசோதித்துப் பார்க்கப்படும். பிறகு தேசிய அளவில் விரிவுபடுத்தப்படும்.
எஸ்ஜி மனநலக் கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று ஆசிய நாகரிக அருங்காட்சிக்கூடத்தில் நடந்தது.
இந்தக் கட்டமைப்பு, 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இளையர் மனநல நல்வாழ்வுக் கட்டமைப்பு என்ற செயல்திட்டத்தின் விரிவாக்கமாகும்.
கொவிட்-19 தொற்று காரணமாக மனநலப் பிரச்சினை முக்கியமானதாக தலை எடுத்துள்ளது.
மனநலன் தொடர்பில் தேசிய உத்தியை உருவாக்க, அமைப்பு
களுக்கு இடையிலான மனநலம், நல்வாழ்வு சிறப்புப் பணிக்குழு சென்ற ஆண்டில் அமைக்கப்பட்டது.
நேற்று தொடங்கப்பட்ட புதிய கட்டமைப்பு, அந்தக் குழுவின் பங்காளித்துவ அமைப்பாகச் செயல்படும்.
எஸ்ஜி கட்டமைப்பின் முக்கிய அங்கமாக நல்வாழ்வுக் குழுக்கள் செயல்படும்

