உற்பத்தி குறைவு: முட்டை விலை மலேசியாவில் உயரும்

உற்பத்தி குறைவு: முட்டை விலை மலேசியாவில் உயரும்

2 mins read

நூற்­றுக்­கும் மேற்­பட்ட கோழிப்­பண்­ணை­கள் மூடப்­பட்டு விட்­ட­தால் மலே­சி­யா­வில் முட்டை விலை ஏறும் நிலை ஏற்­பட்டு உள்­ளது.

குறைவான உற்பத்தி, கோழித்தீவன விலை ஏற்­றம், குறை­வான அர­சாங்க உதவி, விலை உச்­ச­வ­ரம்பு ஆகி­யன கார­ண­மா­க­வும் முட்டை விலை ஏறக்­கூ­டும் என மலே­சிய ஊட­கங்­கள் தெரி­வித்து உள்­ளன.

மலே­சி­யா­வில் கிட்­டத்­தட்ட 300 கோழிப் பண்­ணை­கள் இருந்­தன. அவற்­றில் சுமார் 40 விழுக்­காடு, அதா­வது 130 பண்­ணை­கள் மூடப்­பட்டு விட்­டன.

எஞ்­சி­யி­ருக்­கும் 170 கோழிப் பண்­ணை­களை நடத்­து­வோ­ரும் கூடு­தல் அர­சாங்க உத­வியை எதிர்­பார்க்­கின்­ற­னர். கோழித் தீவன விலை இரு­ம­டங்கு ஏறி­விட்­ட­தால் தாங்­களும் விரை­வில் பண்­ணை­களை மூடக்­கூ­டும் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

அர­சாங்­கம் முட்டை ஒன்­றுக்கு ஐந்து காசு மானி­யம் தரு­கிறது. செலவு அதி­க­ரிப்­பால் அந்த மானி­யம் சரிக்­குச் சரியாகி­ வி­டு­கிறது என்­கி­றார்­கள் அவர்­கள்.

மலே­சிய கால்­ந­டை வளர்ப்பு பண்­ணை­கள் கூட்­ட­மைப்­பின் துணைத் தலை­வர் லீ யூன் யீயு கூறு­கை­யில், இவ்­வாண்டு ஏப்­ர­லுக்­கும் ஜூனுக்­கும் இடை­யில் மக்­காச்­சோ­ளம், சோயா பீன் ஆகி­ய­வற்­றின் விலை­கள் 50 விழுக்­காட்­டுக்கு மேல் ஏறி­விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

"கோழித்­தீ­வ­னத்­தில் கிட்­டத்­தட்ட 80% மக்­காச்­சோ­ள­மும் சோயாவும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால், இவற்­றின் விலை, கொள்­ளை­நோய் காலத்­தி­லி­ருந்தே ஏறி வரு­வ­தால் அத­னைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண்­டா­டு­கி­றோம்," என்­றும் கூறிய அவர், அது­பற்றி விளக்­கி­னார்.

"கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முன், மக்­காச்­சோ­ளம் டன் ஒன்­றுக்கு 800 ரிங்­கிட் (S$252) விலை இருந்­தது. கொள்­ளை­நோய் காலத்­தில் அது 1,300 ரிங்­கிட் ஆனது. தற்­போது மேலும் அதி­க­ரித்து 1,800 ரிங்­கிட் ஆகி­விட்­டது.

"அதே­போல சோயா விலை 2020 ஜன­வ­ரி­யில் 1,650 ரிங்­கிட்­டாக இருந்­தது. தற்­போது அது 2,650 ரிங்­கிட்­டுக்கு உயர்ந்­து­விட்­டது.

"பிப்­ர­வரி 5 முதல் ஜூன் 30 வரை 'சி' கிரேட் முட்டையை 35 காசு­க­ளுக்கு மேல் விற்­கக்­கூ­டாது என அர­சாங்­கம் உச்­ச­ வ­ரம்பு நிர்­ண­யித்­தது. ஆனால், ஒரு முட்­டை­யின் உற்­பத்­திச் செலவு 0.45 காசாக அதி­க­ரித்து உள்­ளது," என்­றார் திரு லீ.