கோத்தபாய: பொருளியல் சீரழிவைத் தடுக்க பெரிதும் முயன்றேன்

கோத்தபாய: பொருளியல் சீரழிவைத் தடுக்க பெரிதும் முயன்றேன்

2 mins read

இலங்­கையை மோச­மான நிலைக்­குத் தள்­ளிய பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைத் தவிர்க்க தம்­மால் இயன்­ற­வரை முயன்­ற­தாக பதவி வில­கிய அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே தெரி­வித்துள்­ளார்.

புதிய அதி­ப­ரைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான நடை­மு­றை­க­ளைத் தொடங்க நேற்று நாடா­ளு­மன்­றம் கூடி­ய­போது திரு கோத்­த­பாய அனுப்­பிய பதவி வில­கல் கடி­தத்தை நாடாளுமன்­றத் தலை­மைச் செய­லா­ளர் தம்­மிக்க தச­நா­யக படித்­தார்.

"பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைத் தடுத்து நிறுத்த என்­னால் இயன்ற எல்லா முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்­டேன். அந்த நோக்­கத்­து­டன் அனைத்­துக் கட்சி அர­சாங்­கம் அல்­லது ஐக்­கிய அர­சாங்­கம் அமைக்க எல்­லாக் கட்­சி­க­ளை­யும் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தேன்," என்று திரு கோத்­த­பாய எழுதி இருந்­த­தாக திரு தச­நா­யக படித்­தார்.

தாம் அதி­பர் பொறுப்பை ஏற்­ப­தற்கு முன்­னரே, தவ­றான நிர்­வா­கம் கார­ண­மாக பொரு­ளி­யல் பாழ்­பட்டு இருந்­த­தா­க­வும் கொவிட்-19 கொள்ளை நோய் நில­வ­ரத்தை மோச­மா­க்­கி­ய­தா­க­வும் திரு கோத்­த­பாய தமது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொள்ளை­நோய் கார­ண­மாக சுற்­றுப்­ப­ய­ணி­கள் வரத்து நின்­ற­தோடு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பணம் அனுப்­பு­வ­தும் குறைந்­த­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றம் மீண்­டும் நாளை மறு­தி­னம் (ஜூலை 19) கூடும். அதி­பர் பதவி வாக்கெடுப்புக்குத் தாக்­கல் செய்­யப்­படும் வேட்­பு­ம­னுக்­களை பெற்­றுக்­கொள்­ளும் பணி­கள் அன்­றைய தினம் நடை­பெ­றும். மறு­நாள், புதன்­கி­ழமை ரக­சிய வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும்.

பிர­த­மர் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்­ட­து­போல நாடா­ளு­மன்­றத்தை போராட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கி­வி­டாத வகை­யில் நேற்று பாது­காப்­பு பலப்­

ப­டுத்­தப்­பட்டிருந்­தது. நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்­திற்­குச் செல்­லும் சாலை­கள் நெடுக துப்­பாக்கி ஏந்­திய 100க்கும் மேற்­பட்ட காவல்­து­றை­யி­னர் நிறுத்தி வைக்­கப்­பட்­ட­னர். ஆட்­கள் நுழைந்­து­வி­டா­த­படி தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தன. தண்­ணீர் பீய்ச்­சும் வாக­னங்­களும் அங்கே நிறுத்தி வைக்­கப்­பட்டு இருந்­தன.

இருப்­பி­னும் ஆர்ப்­பாட்­டம் நடப்­ப­தற்­கான அறி­குறி எது­வும் அந்­தப் பகு­தி­யில் தென்­ப­ட­வில்லை.

மகிந்த, பசில் வெளியேறத் தடை

இலங்கை முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­வும் அவ­ரது சகோ­த­ர­ரும் முன்­னாள் நிதி­ய­மைச்­ச­ரு­மான பசில் ராஜ­பக்­சே­வும் ஜூலை 28 ஆம் தேதி வரை அனு­ம­தி­யின்றி இலங்­கையை விட்டு வெளி­யேற இலங்கை உச்ச நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது. மத்­திய வங்­கி­யின் இரண்டு முன்­னாள் ஆளு­நர்­கள் உட்­பட மூன்று முன்­னாள் அதி­கா­ரி­க­ளுக்­கும் இதேபோன்ற தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப் பித்துள்ளது.

முன்­ன­தாக, இலங்கை அமைச்­ச­ரவை நேற்று முன்­தி­னம் கொழும்பு சுதந்­திர சதுக்­கத்­திற்கு அரு­கில் உள்ள ஹோட்­டல் ஒன்­றில் தற்­

கா­லிக அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யில் கூடி­யது.

இந்­நி­லை­யில், இலங்கை நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் மகிந்த யாப்பா அபே­வர்­த­னவை இலங்­கைக்­கான இந்­தி­யத் தூதர் கோபால் பாக்லே நேரில் சந்­தித்­துப் பேசி­னார். இலங்­கை­யின் பொரு­ளி­யல் மீட்­சிக்­கும் நிலைத்­தன்­மைக்­கும் இந்­தியா தொடர்ந்து உறு­து­ணை­யாக இருக்­கும் என்று அவர் கூறி­ய­தாக இந்­தி­யத் தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

இலங்கை நிலவரம் சிறப்புக்

கட்டுரை - பக்கம் 10