நாளை இந்திய அதிபர் தேர்தல்: முர்மு வெற்றிபெற வாய்ப்பு

நாளை இந்திய அதிபர் தேர்தல்: முர்மு வெற்றிபெற வாய்ப்பு

1 mins read

இந்­திய அதி­பர் தேர்­தல் நாளை (ஜூலை 18) நடை­பெ­று­கிறது. நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்க உள்­ளார்­கள். ஆளும் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி வேட்­பா­ள­ராக திரௌ­பதி முர்மு, 64, எதிர்க்­கட்­சி­

க­ளின் வேட்­பா­ள­ராக யஷ்­வந்த் சின்ஹா, 84, ஆகி­யோர் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

தேர்­த­லில் பதி­வாகும் வாக்கு­ க­ளின் எண்­ணிக்கை வியா­ழக்­கி­ழமை (ஜூலை 21) எண்­ணப்­படும். ஆளும் கட்சி வேட்­பா­ளரே வெற்­றி­பெ­று­வார் என்று தொடக்­கம் முதலே கணிக்­கப்­பட்டு வரு­வ­தால் பெரிய திருப்­பம் எது­வும் ஏற்­ப­டாது என்று கூறப்­ப­டு­கிறது.

சில நாள்­க­ளுக்கு முன்­னர் 50% வாக்­கு­க­ளு­டன் திரௌ­பதி முர்மு வெற்­றி­பெ­று­வார் என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில், அது தற்­போது 60 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­துள்­ளது. பாஜ­கவை ஆத­ரிக்­காத சிவ­சேனா, தெலுங்கு தேசம் போன்­ற­வற்­றோடு மேலும் சில மாநி­லக் கட்­சி­கள் திரு­வாட்டி முர்­முவை ஆத­ரிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளன.

அத­னால், ஒவ்­வொரு மாநி­ல­மா­கச் சென்று ஆத­ரவு திரட்டி வந்த எதிர்த்­த­ரப்பு வேட்­பா­ளர் யஷ்­வந்த் சின்ஹா, மகா­ராஷ்­டிர பய­ணத்தை ரத்து செய்­து­விட்­டார். எதிர்­பா­ரா­த­வி­த­மாக சிவ­சே­னா­வும் ஆளும் தரப்பு வேட்­பா­ளரை ஆத­ரிக்க முடி­வு­செய்­த­தால் திரு சின்ஹா பின்­வாங்­கி­னார். சிவ­சேனா வசம் 19 மக்­க­ளவை உறுப்­பி­னர்­களும் 3 மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­களும் 15 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களும் உள்­ள­னர்.

அதே­நே­ரம், திரு­வாட்டி முர்மு கடந்த வியா­ழக்­கி­ழமை மகா­ராஷ்­டிரா சென்று பாஜக எம்­எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்டவர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி னார்.