இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் ஒலிம்பியாட்: சதுரங்க நகரானது தலைநகர் சென்னை

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் ஒலிம்பியாட்: சதுரங்க நகரானது தலைநகர் சென்னை

2 mins read
29eda3a4-93df-499f-b3a6-148a54a01575
செஸ் ஒலிம்பியாட் போட்டி நெருங்கி வரும் நிலையில், அதைப் பிரபலப்படுத்த சதுரங்கப் பலகையில் உள்ள கறுப்பு, வெள்ளை நிற கட்டங்களைப் போன்று வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை நேப்பியர் பாலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

செஸ் ஒலிம்­பி­யாட் எனப்­படும் உலக சது­ரங்­கப் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்­தப்­பட்டு வரு­கிறது. உலக சது­ரங்­கக் கூட்­ட­மைப்பு ஏற்­பாட்­டில் ஈராண்­டு­களுக்கு ஒரு முறை நடத்­தப்­பட்டு வரும் இந்­தப் போட்டி இது­நாள்வரை இந்தி­யா­வில் நடந்­ததே இல்லை.

ஆனால் முதன் முத­லாக இந்தி யா­வில், அது­வும் உலக சது­ரங்கப் புலி­யான விஸ்­வ­நா­தன் ஆனந்த் பிறந்த தமிழ்­நாட்­டின் தலை­ந­கர்­ அ­ருகே மாமல்­ல­பு­ரத்­தில் இந்த மாதம் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி­ வரை 44வது செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி நடக்­கிறது.

இந்த உல­கப் போட்­டியை இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்கிவைக்க இருக்­கி­றார்.

இந்தப் போட்­டியை மிக வெற்­றி ­க­ரமான முறை­யில் நடத்தி அதன் மூலம் தமிழ்­நாட்டை உல­கம் உற்று நோக்­கும்­படி செய்ய வேண்­டும் என்று தமி­ழக முதல்­வர் மு க ஸ்டா­லின் இலக்கு நிர்ண­யித்துள்ளார். தமிழகத்தில் உலகப் போட்டி பர பரப்பு, மகிழ்ச்சி, ஊக்கம் அதிகமாகி வருகிறது.

தலை­ந­கர் சென்­னை­யும் மாமல்­ல பு­ர­மும் சது­ரங்கமய­மாகி வரு­கின் றன. சென்னை நேப்­பி­யர் பாலம் கறுப்பு, வெள்ளை நிறத்­தில் சதுரங்கப் பலகை போல் நிறம் மாறி இருக்­கிறது.

சென்னை உலக சது­ரங்­கப் போட்டி­யில் 200 நாடு­க­ளைச் சேர்ந்த 2,000 சது­ரங்க விளை யாட்டு வீரர்­கள் பங்­கேற்க உள்­ள­னர். போட்­டியை விளம்­ப­ரப்­ப­டுத்து ­வ­தற்­காக ஆஸ்­கார் புகழ் ஏ ஆர் ரஹ்­மான் இசை­யில் விளம்­ப­ரப் படம் வெளியிடப்­பட்­டுள்­ளது.

அதை தமிழ்­நாட்­டின் சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்த் வெளி­யிட்டு இருக்­கி­றார். 'செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி முதல் முறை­யாக இந்­தி­யா­வில், அது­வும் நம் தமி­ழ­கத்­தில் நடை­பெற இருப்­பது நமக்­கெல்­லாம் பெருமை' என்று ரஜினி குறிப்­பிட்டு இருக்­கி­றார்.