ரஷ்யாவைக் கண்டித்த ஜி20 நாடுகள்

ரஷ்யாவைக் கண்டித்த ஜி20 நாடுகள்

1 mins read

இந்­தோ­னீ­சி­யா­வில் ஜி20 நாடு­க­ளின் அமைச்­சர்­கள்நிலை கூட்­டம் நடந்­தது. அந்­தக் கூட்­டத்­தின் முடி­வில் நேற்று அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.

உக்­ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்­ததை ஜி20 அமைப்­பில் இருக்­கும் பல நாடு­களும் கண்­டிப்­ப­தாக அந்த அறிக்கை தெரி­வித்­தது.

உக்­ரேன் போர் முடி­வுக்கு வர­வேண்டும் என்­று அந்த நாடு­கள் வலி­யு­றுத்தி கேட்­டுக்­கொண்­டுள்­ளன.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவில் ஜி20 நிதி அமைச்­சர்­களும் மத்­திய வங்கி ஆளு­நர்­களும் இரண்டு நாள் கூட்­டம் நடத்­தி­னர்.

ஆனால், உக்­ரேன் போர் தொடர்பில் ரஷ்­யா­வு­டன் இணக்­கம் இல்­லா­மல் போனதை அடுத்து கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

"உல­கப் பொரு­ளி­யல் மீட்சி மெது­வடைந்து இருப்­ப­தாக ஜி20 அமைப்­பின் பல உறுப்பு நாடு­களும் ஒப்­புக்­கொண்­டன. உக்­ரேன் மீது ரஷ்யா தொடுத்த போர் கார­ண­மாக உல­கப் பொரு­ளி­யலுக்குப் பின்­ன­டைவு ஏற்­பட்டுள்ளது. ரஷ்­யா­வின் அந்­தச் செயலை ஜி20 நாடு­கள் கடு­மை­யாகக் கண்­டித்­தன.

"அந்­தப் போர் முடி­வுக்கு வர­வேண்டும் என்­றும் அந்த நாடு­கள் கோரிக்கை விடுத்­தன," என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட கூட்ட முடிவு அறிக்­கை­யில் இந்­தோ­னீ­சியா தெரி­வித்­தது.