மருத்துவப் படிப்பில் அதிக தொழிற்கல்வி பட்டதாரிகள்

மருத்துவப் படிப்பில் அதிக தொழிற்கல்வி பட்டதாரிகள்

3 mins read

சாதனையாக தேசிய பல்கலை மருத்துவக் கல்லூரி 18 பேரை சேர்த்தது

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் யோங் லூ லின் மருத்­து­வக் கல்­லூரியில் இந்த ஆண்டு பல­துறை தொழிற்­கல்­லூரி பட்­ட­தா­ரி­கள் 18 பேர் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

இந்த எண்­ணிக்கை ஒரு சாதனை என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அந்த மருத்­து­வக் கல்­லூரி ஆண்டுக்கு ஏறக்­கு­றைய 300 மாண­வர்­க­ளைச் சேர்த்­துக் கொள்­கிறது. கடந்த மூன்று ஆண்­டு­களா­கவே கல்­லூரி ஆண்டு ஒன்­றுக்கு ஆறு முதல் ஏழு தொழிற்கல்­லூரி பட்­ட­தா­ரி­களைச் சேர்த்து வந்­துள்­ளது.

ஆனால், இந்த ஆண்­டில் அத்­த­கைய பட்­ட­தா­ரி­கள் 18 பேர் மருத்­து­வம் படிக்க சேர்த்­துக்­கொள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள். இது 2007க்கு பிறகு ஆக அதி­கம் என்­பதை கல்­லூரி உறு­திப்­ப­டுத்­தி­யது.

அந்­தக் கல்­லூரி, முதன்­மு­த­லாக 2007ல்தான் நீ ஆன் பல­துறை தொழிற்­கல்­லூரி பட்­ட­தா­ரி­கள் இரண்டு பேரை சேர்த்­துக்­கொண்­டது.

பல­துறை தொழிற்­கல்­லூரி பட்­ட­தாரி­களில் அதி­க­மா­ன­வர்­கள் மருத்­து­வம் படிக்க விரும்­பு­கி­றார்­கள். இவர்­கள் உயிரி­யல் மருத்­து­வம், தாதிமை உள்­ளிட்ட தொடர்­பு­டைய பட்­ட­யப் படிப்பு முடித்­த­வர்­கள் என்­பதை அந்த மருத்­து­வக் கல்லூரி சுட்­டிக்­காட்­டி­யது.

இந்த ஆண்டு மாண­வர் சேர்க்கை மதிப்­பீட்­டில் அதி­க­மான தொழிற்­ப­டிப்பு மாண­வர்­க­ளின் செயல்­தி­றன் சிறப்­பாக இருந்­ததாக கல்­லூரித் தலை­வர் பேரா­சி­ரி­யர் சோங் யாப் செங் தெரி­வித்­தார்.

"பல­துறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் பொது­வாக நடை­முறைத் தேர்ச்­சி­களை எளி­தில் கிரகித்துக்­கொள்­வார்­கள். செயல் சார்ந்த அறி­வு­ஞா­னம் உள்­ள­வர்­கள். இது அவர்­க­ளுக்கு நல்ல அனு­கூ­ல­மாக இருக்­கிறது," என்று அந்­தப் பேரா­சி­ரி­யர் விளக்­கி­னார்.

"மருத்­துவக் கல்­வியைப் படித்து முடிக்­கும் அள­வுக்கு மாண­வர்­க­ளி­டம் ஏட்டுக்­கல்வி திறமை இருக்­கிறது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது முக்­கி­ய­மான ஒன்று.

"அதே நேரத்­தில் அதற்கு அப்­பாற்­பட்ட மாண­வர்­க­ளின் இதர பல சாத­னை­களை­யும் கருத்­தில்­கொண்டு கல்­லூரி முடி­வு­களை எடுக்­கிறது.

"ஒரு மாண­வ­ரின் சமூ­க சேவை, தலை­மைத்­துவ பாணி, ஆய்வு, தேசிய சேவை, சரி­யான நன்­னெ­றி­கள் ஆகி­ய­வற்­றை­யும் கல்­லூரி கவ­னத்­தில் எடுத்துக்­கொண்டு மருத்­து­வப் படிப்பு மாண­வர்­களைத் தேர்ந்­தெ­டுக்­கிறது.

"இதன்­மூ­லம் எதிர்­கா­லத்­தில் ஆற்றல்­மிக்க, கரு­ணை­மிக்க மருத்­து­வர்­க­ளாக உரு­வா­வதை கல்­லூரி உறு­திப்­படுத்­து­கிறது," என்று அந்­தப் பேரா­சிரி­யர் விளக்­கி­னார். மருத்­து­வப் படிப்­புக்குத் தற்­காலி­க­மாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு இருக்­கும் மாண­வர்­கள், மாண­வர் சேர்க்கை மதிப்­பீட்­டில் தேர்ச்சி அடைய வேண்­டும்

பல நேர்­மு­கத் தேர்­வு­களில் அவர்­கள் கலந்­து­கொள்ள வேண்­டும். கணினித் தேர்­வை­யும் அவர்­கள் எழு­த­வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மாண­வர்­க­ளின் அதிக பன்­ம­யப் பின்னணி பற்றி கேட்­ட­தற்கு விளக்­கம் அளித்த பேரா­சி­ரி­யர் சோங், தன்­னு­டைய கல்­லூரி அனைத்து பின்­ன­ணி­க­ளை­யும் கொண்ட மாண­வர்­களை வர­வேற்று ஏற்­றுக்­கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார்.

வெவ்­வேறு உயர்­கல்வி நிலை­யங்­களைச் சேர்ந்த, பல­த­ரப்­பட்ட கல்வி பின்­ன­ணி­க­ளைக் கொண்ட மாண­வர்கள் தங்­க­ளு­டன் கொண­ரும் தேர்ச்­சி­கள், கண்­ணோட்­டங்­கள் கார­ண­மாக கற்­றல் நடை­முறை நன்கு செறி­வ­டை­கிறது. அதோடு சக­ மா­ண­வர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டல் மேம்­ப­டு­கிறது என்று அவர் மேலும் விளக்­கி­னார்.

இத­னி­டையே, நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கம், தானும் பல­தரப்­பட்ட பின்­ன­ணி­யைக் கொண்ட மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­வ­தாக தெரி­வித்­தது.

இப்பல்­க­லைக்­க­ழ­கம் ஆண்டு ஒன்­றுக்கு ஏறத்­தாழ 160 மருத்துவப் படிப்பு மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்­கிறது.

இந்த ஆண்­டில் பல­துறைத் தொழில் படிப்பு தகு­தி­யு­டன் கூடிய இரண்டு மாண­வர்­களை இது சேர்த்­துக்­கொண்டு இருக்­கிறது. சிங்­கப்­பூர் விளை­யாட்டு கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஒரு பட்­ட­தா­ரி­யை­யும் இது மருத்­து­வப் படிப்­பில் சேர்த்­துள்­ளது.