'அணுசக்தி ஆலையில் இருந்து தாக்கும் ரஷ்யா'

'அணுசக்தி ஆலையில் இருந்து தாக்கும் ரஷ்யா'

2 mins read

உக்­ரே­னில் உள்ள ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய அணு­சக்தி ஆலை­யில் ரஷ்யா ஆயு­தங்­களைக் குவிக்­கிறது என்­றும் அந்த ஆலை­யில் இருந்து ஏவு­க­ணை­களை வீசி பக்­கத்­தில் உள்ள வட்­டா­ரங்­களை அது தாக்­கு­கிறது என்­றும் உக்­ரே­னின் அணு­சக்தி முகவை புகார் தெரி­வித்துள்ளது.

ஸாபோ­ரிஸ்­சியா என்ற அந்த அணு­சக்தி ஆலை­யில் சூழ்­நிலை மிக­வும் பதற்­ற­மாக இருக்­கிறது என்­றும் 500 ரஷ்யப் படையினர் அந்த ஆலையைத் தங்­கள் கட்டுப்­பாட்­டில் வைத்து இருப்­ப­தா­க­வும் அந்த முக­வை­யின் தலை­வர் பெட்ரோ கோட்­டின் கூறி­னார்.

அந்த அணு­சக்தி ஆலை உக்­ரே­னின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் அமைந்துள்ளது. அது சில மாத­மா­கவே ரஷ்யக் கட்டுப்­பாட்­டில் இருந்து வரு­கிறது.

ரஷ்யா, சனிக்­கி­ழமை ஏவு­கணை மூலம் தாக்­கி­ய­தில் நிகோ­போல் என்ற நக­ரில் குடி­யி­ருப்புக் கட்­ட­டங்­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் அதில் இரண்டு பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் நிப்ரோ என்ற வட்­டா­ரத்­தின் ஆளு­நர் ரெஸின்­செங்கோ கூறி­னார்.

இத­னி­டையே, உக்­ரே­னில் அடுத்த கட்ட தாக்­கு­த­லுக்கு ரஷ்யா ஆயத்­த­மாகி வரு­வ­தாக உக்­ரே­னிய ராணுவ அதி­காரி ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

எல்லாப் பகு­தி­க­ளி­லும் தன்­ படை­கள் ராணுவ நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­படுத்­தும் என்று மாஸ்கோ முன்­ன­தாக தெரி­வித்­தது. பல நகர்­களில் ரஷ்ய எறி­ப­டை­களும் ஏவு­க­ணை­களும் விழுந்து வெடித்­த­தில் பலர் கொல்­லப்­பட்­ட­தாக தலை­ந­கர் கியவ் தெரி­வித்­தது.

கடல், ஆகா­யத்­தில் மட்­டு­மின்றி பல இடங்­களில் இருந்­தும் ரஷ்யா தாக்­கு­தல் நடத்தி வரு­கிறது என்று உக்­ரே­னிய ராணுவ வேவுத்­துறை பேச்­சா­ளர் வாடிம் ஸ்கி­பிட்ஸ்கி தெரி­வித்­தார்.

உக்­ரே­னின் கிழக்கு வட்­டா­ர­மான டோனட்ஸில் இன்­ன­மும் தன் வசம் இருக்­கும் சுலோ­வி­யான்ஸ்க் என்ற முக்­கி­ய­மான நக­ரின் மீது தாக்­கு­தல் நடத்­து­வ­தற்கு தோதாக ரஷ்யா படை­களைக் குவித்து ஆயத்­த­மாகி வரு­வ­தாக உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­தது. கடந்த மூன்று நாள்களில் நகர்ப் பகுதிகளில் ரஷ்ய தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்து இருக்கிறது.