இந்தியா கொவிட்-19 தொற்றைத் தவிர்த்துக்கொள்வதில் இமாலய சாதனையைப் படைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கிருமிக்கு எதிரான இப்போதைய ஒரே கவசம் என்று நம்பப்படும் தடுப்பூசி மருந்தை 2 பில்லியன் (200 கோடி) முறை மக்களுக்குப் போட்டு அசத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி இயக்கம் சென்ற ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. வெறும் 18 மாதங்களில் அது இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இதில் இன்னும் ஒரு படி மேலாக தடுப்பூசி இயக்கத்தின் வேகம் குறையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது முதல் ஒன்பது மாதங்களில் 1 பில்லியன் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த ஒன்பது மாதங்களில் அதே வேகத்தில் மேலும் 1 பில்லியன் தடுப்பூசி போடப்பட்டதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
'இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காக தயாரிப்போம்' என்ற இயக்கம் உள்ளிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இடைவிடா முயற்சியே இந்தச் சாதனைக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் கிட்டத்தட்ட பெரியவர்கள் எல்லாருமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பதாக அவர்கள் கூறினர்.
"இந்தியாவில் தடுப்பூசி இயக் கம் இதுவரை ஏழு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது.
"ஐரோப்பா முழுவதுமே மொத்தம் ஏறக்குறைய 1.3 பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதை இந்தியா விஞ்சிவிட்டது.
"இது ஒரு சாதனை. இந்தியா கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு 230 மில்லியன் தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது. கைவசம் இன்னமும் ஏறக்குறயை 100 மில்லியன் குப்பி மருந்து இருக்கிறது.
"நாடு 18 மாதங்களில் ஏறக்குறைய 2.330 பில்லியன் குப்பி தடுப்பூசி மருந்தைத் தயாரித்து உள்ளது" என்று உயர் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 20,528 பேருக்குத் தொற்று உறுதி யானதாகவும் 49 பேர் உயிர் இழந்த தாகவும் இந்திய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.

